Thursday, October 11, 2018

நேரத்தை வீணாக்காதீர்கள்



வசந்தகாலம் என எண்ணி பயணித்தேன் உன்னுடன்
இலையுதிர்காலமாய் எனை நீங்கிச் சென்றாய்
கருமுகில் சூழ் கார்காலமாய் கண்கள் நீர் மூழ்கிடக் கேட்டேன் திரும்பி வந்துவிடு என்று
சொல்லில் கோடை காலம் கம்பீரமாக என்னை விரட்டியது
இருந்தும் மீண்டுமொரு வசந்தகாலம் வராதா என 
துளிர்விட்டு உனக்காக காத்திருந்தேன்
கிடைத்தது உன் திருமணப்பத்திரிக்கை
மணப்பெண் என்று யாரயோ குறிப்பிட்டு
என் கண்ணீர் காற்றில் கரைந்து போனது
என் தவிப்பு தவிடு பொடியானது
என் நினைவலை உன்னைவிட்டு நிலைகுலைந்து போனது
காலங்கள் மாறி மாறி மாறிக்கொண்டே இருக்கிறது
ஆனால் என்னால் மட்டும் மறந்தும் மாறிவிட முடியவில்லை
இடி விழுந்த மரமாய் உணர்வற்று இருக்கின்றேன்
இனி எக்காலமும் என்னில் எந்த காலமும் நிகழாது
யாரும் தண்ணீர் ஊற்றி நேரத்தை வீணாக்காதீர்கள்

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...