பெண்ணுக்குள் புதிதாய் ஓர்
தேவதை பிறக்கின்றாள்
அவள் வர்ணமற்றவள்
அவள் உருவமற்றவள்
அவள் உணர்வுகளால் வர்ணம் கொண்டு
உணர்ச்சிகளாய் உருவம் கொள்கிறாள்
பெண்ணுக்குள் புதிதாய் ஓர்
தேவதை பிறக்கின்றாள்
அவள் அன்பின் அர்த்தமாய்
அரவணைப்பின் அற்புதமாய்
அகத்தின் தேவைகள் தானாய் அறிந்து
அடுக்களையும் தாண்டி அபூர்வம் காண்பிக்கின்றாள்
பெண்ணுக்குள் புதிதாய் ஓர்
தேவதை பிறக்கின்றாள்
அவள் கோபங்களில் அக்கறை
அவள் கண்ணீரில் ஏக்கம்
அவள் மௌனங்களில் விரக்தி
அனைத்தையும் மனமெனும்
பெட்டகத்தில் பத்திரமாய்
பூட்டிவைத்தே பொக்கிஷமாகின்றாள்
பெண்ணுக்குள் புதிதாய் ஓர்
தேவதை பிறக்கின்றாள்
அவள் துடிதுடிக்கும் பட்டாம்பூச்சியின்
இறக்கைகளுக்கு ஈடாய் ப்ரியமானவர்களுக்காய்
என்றும் துடித்துக்கொண்டு எண்ணத்தில்
வாழ்க்கை நடத்துகின்றாள்
பெண்ணுக்குள் புதிதாய் ஓர்
தேவதை பிறக்கின்றாள்
அவள் போலியாய் கபடநாடகம் நாவில் விஷம்
கண்களில் வேடம் பூண்டு நடமாடும் ஓநாய்கள்
மத்தியிலும் புத்தியாய் சுதாகரித்து
தன்நிலை மாறாத தைரியசாலியாகின்றாள்
பெண்ணுக்குள் புதிதாய் ஓர்
தேவதை பிறக்கின்றாள்
அவள் மூர்க்கமான தன்நலவாதிகள்
ஈட்டியாய் குத்தும் கூரிய வார்த்தைகளுக்கும்
மனம் நெகிழும் துரோகச்செயல்களுக்கும்
லேசான புன்னகை வீசி கடந்து செல்கின்றாள்
No comments:
Post a Comment
Your concern is appreciable. Thank you for the review