Saturday, March 16, 2024

நாடோடிக்காதல்


நாடோடியாய் நானும் நீயும் 

நகரெல்லம் வலம் வருவோமா

ஒரு இரவு ஒரு பகல் தாண்டி 

பயணத்தை தொடர்வோமா

ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம் 

நமக்கு நாமாய் வாழ்வோமா

பாதி வழி் தொலைத்த வாழ்க்கைக்கும் 

மீதித்தூரம் வாழ்ந்திடுவோமா

போகுமிடம் சேரும் நபர் தெரியாத முகவரியைத் 

தேடித் தேடி அலைவோமா

நாடோடிக் காதற்புறாக்கள் போல் 

எல்லை தாண்டி பறப்போமா

பாய் விரித்து பல் இளிக்கும் நட்சத்திரங்கள் 

கண்மூடி எண்ணுவோமா

வான் கடந்த பயணத்திற்கு 

நட்சத்திரங்களை கூட்டிச்செல்வோமா

மழையில் குளித்து வெயில் உலர்ந்து 

புது நடை பயில்வோமா

காற்றைக்கொஞ்சம் இறுகப்பிடித்து 

தலையணை மெத்தை செய்வோமா

ஓடும் மேகங்களைத் துரத்திப் பிடிக்க 

விண்கான விரைந்து செல்வோமா 

காடு தாண்டி மலைகள் ஏறி் 

பயணத்தைத் தொடர்வோமா

சுடச் சுடச் தேநீர் மழையில் தெப்பமாய்

நனைந்துகொண்டு அருந்திடுவோமா

நெய்தல் மருதம் முல்லை கடந்து

நெடுந்தூரம் சென்றிடுவோமா

கைபேசி வீட்டில் விட்டு 

விரல்களால் பேசிச் செல்வோமா

போகும் பாதை தெரியாத கால்களுக்கு

கால்தடங்களை துணையாய் விட்டுச் செல்வோமா

தூங்கும் சூரியனை தட்டி எழுப்ப

சிகரம் தொட்ட உயரம் செல்வோமா

நிலவினை கைபிடித்து இழுத்து

வீடு திரும்பாமல் தடுத்திடுவோமா

வானவில்லின் வர்ணங்களைத்

திருடி உடை உடுத்திடுவோமா

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்

நம் காதல் கதை சொல்லிடுவோமா

பசித்த வயிற்றை சமாதானம் செய்திட

பார்ப்பவர்கள் வீட்டிற்கு சென்றிடுவோமா

பிரியும் நேரம் வயிறும் மனமும் 

இன்பத்தில் நிரம்பி விடைபெறுவோமா

கடிகாரமும் தேவையில்லை 

நேரத்திற்கு கடிவாளம் போடும் 

அவசியமும் இல்லை

எந்தன் சொப்பனம் நீள நீள

நீயும் நானும் நாடோடிகளாய் 

அலைந்து காதல் செய்வோமா



காதலும் கடந்து போகும்







சுயமரியாதையை எங்கும்

விட்டுக்கொடுக்காத பெண்

வாழ்க்கையில் அடுத்தகட்ட நகர்வை 

எதிர்பார்க்காத ஆண்

இருவரிடையே என்ன உறவுதான் 

இருந்துவிடப்போகிறது?


வாழ்க்கையில் பிடித்தபாதையில்தான் 

செல்வேன் என்ற இறுமாப்பு

உடற்சோர்விலும் மனம் தளரா குறிக்கோள்

ஏதுமற்ற நிலையிலும் தன்நம்பிக்கை

நாதியற்ற நிலையிலும் 

யாரிடமும் வேண்டியே நாடிச்செல்லா

அழகிய பெண் திமிர் அவள் யாழினி


திறமையும் அறிவும் தேடாத சமூகமிது

பணமும் அரசியலும் சூழ்ச்சிசெய்யும் காலமிது

பள்ளங்களில் சறுக்கிவிழ 

பாதை நீள முட்கள் கொண்டு

ஓட்டப்பந்தயம் நடத்தும் வேடிக்கை மனித மிருகங்களிடம்

தாக்கப்பட்ட இதயத்தை தானே மருந்திட்டு

மீள் சுழற்சிக்கு தயாராகின்றாள்


அவளிடமும் ஆயிரம் கவலைகள் உண்டு

கண்ணீருக்குள் கதைகளுண்டு

சாதாரண பெண்களைப்போல் காதலும் காமமும்

கிடைத்துவிடாதா என்ற ஏக்கமும் உண்டு

இருந்தும் அவளை ஏதோ ஒன்று தடுக்கிறது

அது அவளின் தனி அடையாளத்திற்கான அங்கீகாரம்


இத்தனையாய் சொல்லப்படும் அவள் என்ன இரும்புமனிசியா?

மனமற்று இரும்புத்திரையில் இதயம் கொள்ள?

அவள் தோள் சாயவும் 

நம்பிக்கையாய் அருகில் அமர்ந்து 

ஓர் சில வார்த்தை கேட்கவும்

இதமான பெயர் அற்ற ஓர் உறவுதான் 

அவன் கதிர்


தன்நம்பிக்கையில் சுற்றும் 

பெண்ணியவாதி அவள் 

மனம் சாய்த்து கதை சொல்லவும் 

உறவற்ற ஓர் ஆண் உருவம் அவன்


காதலன் கணவன் நண்பன் என்ற வட்டம் தாண்டி

இதமான இந்த உறவுக்கு தமிழ் இலக்கணத்தில்

வழங்கப்பட்ட மொழி எதுவோ?


அவள் மனம் அறியது ஒரு நிமிடம் அவன் கரம் பற்றி கடிகாரமுள்ளாய் கடக்கின்ற நொடிக்குள்

ஏதோ அவன் வரவில் சாதித்தவளாய் நன்றியுடன் ஒரு புன்னகையில் கடக்கும் இருவருக்குள் 

இந்தக் காதல் என்ன அதுவும் கடந்து போகும்

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...