Thursday, October 11, 2018

நான் வரைந்த சித்திரத்தை நீ அறிவாயா அம்மா❤️

குழந்தையாய் உன் கரத்தில் தவழ்ந்தபோது என்னை அரவணைத்து தந்தாய் முதல் முத்தம்
உன் ஓசை கேட்டு திரும்பிய என் புன்னகைக்கு
கண்மணி என்னைக் கண்டு கொண்டாய் என இரண்டாம் முத்தம்
உன் மொழி பேசிட நான் முயற்சித்து பல ஓசைகள் எழுப்பிடத் தந்தாய் மூன்றாம் முத்தம்
பிஞ்சு விரல் நீட்டி உன்னைத் தொட்டு புன்னகைக்கையில் 

உள்ளங்கைகளில் தந்தாய் நான்காவது முத்தம்
பசி தீர்க்கும் போது உன் முகம் கண்டு அருந்திய அமிர்தம்
வாசனை நுகரந்து தந்தாய் ஐந்தாவது முத்தம்
உன் கருங்கூந்தல் தன்னை இறுகப் பற்றிக் கொண்ட நான்
என்னை விட்டு அகலாதே என சமிஞ்சை செய்திட
கெஞ்சலுடன் தந்தாய் ஆறாவது முத்தம்
உன்னையும் தான்டி புதிய உலகமாய் தந்தையை அறிமுகம் செய்து பெருமையுடன் தந்தாய் ஏழாவது முத்தம்
நான் ஈன்றெடுத்த பொக்கிஷம் என்று ஊரறியக் கூறி
கவர்வமாய்த் தந்தாய் எட்டாவது முத்தம்
வெயிலோ மழையோ பிணியோ குளிரோ எதுவும் உன்னைத் தாண்டி வராமல் காத்துத் தந்தாய் ஒன்பதாவது முத்தம்
பல முயற்சியின் பின் சற்றும் தழராத நான்
அம்மா எனக்கூறிட ஓட்டு மொத்த அன்பையும் கொட்டி
திகட்டாமல் என் உயிரே எனத்தந்தாய் பத்தாவது முத்தம்
இந்த பத்து முத்தங்களை நான் என்றும் மறவேன் அதுபோல்
பத்து மாதம் கருவறையில் முத்தத்தால் நான் வரைந்த சித்திரத்தை நீ அறிவாயா அம்மா
❤️

4 comments:

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...