Friday, October 12, 2018

மாற்றாள் காதலன்

ஆண்மகனே!
உன்னிடம் வேண்டுதல் விடுக்கவும் கோரிக்கை வைக்கவும்
என்னிடம் தகுதி இல்லை
ஆனால் ஒன்றைக் கூறுகின்றேன் சற்று
செவிமடுத்தால் போதும்
என்றொரு பெண்ணை நீ உள்ளத்தாலும் உடலாலும்
நேசிக்கத் தொடங்கினாயோ
அன்றே அவள் மனதில் தாழி கட்டா கணவன் எனும்
மதிப்பை அடைந்துவிட்டாய்
அதன்பின் அவள் அழைப்புகளும் நடத்தைகளும்
உன்னைத் தாங்கிடும் வண்ணமே இருக்கும்
நீ கவலை கொண்டால் அவள் கண்ணீர் வடிப்பாள்
நீ கோபம் கொண்டால் அவள் பணிந்து போவாள்
நீ பசி கொண்டால் அவள் ஆகாரமாகுவாள்
நீ சோர்வு கொண்டால் அவள் புத்துணர்வாக்குவாள்
இப்படி உனாக்காக தன்நிலையை மாற்றிக் கொள்வாள்
ஆனால் உன்னால் உருவாகும் பந்தத்தில் ஏமாற்றம் வந்தால் அதைத் தாங்கமாட்டாள்
பெண்களின் குணநிலையில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உறைப்பு, உவர்ப்பு எனப் பாகுபாடு உண்டுதான்
ஆனால் உள்ளத்தில் உனக்காக உள்ள அன்பு மட்டும் என்றும் ஒன்றுதான்
தெரிவு செய்வதில் நிதானம் கொள் அல்லது தெரிவினை தள்ளிவை
புதியன புகுதலிலும் பழையன கழிவதிலும் காதலைப் பிரயோகிக்காதே
உன் அன்னையை மதிக்காதவனாய் நீ இருக்கலாம்
உன் சகோதரிகளுக்கு பொறுப்பற்றவனாய் இருக்கலாம்
உன் காதலிக்கு ஏமாற்றுக்காரனாயும் இருக்கலாம்
ஆனால் நாளை பிறக்க இருக்கும் உன் பெண்குழந்தைக்கு
உண்மையான தந்தையாய் இருப்பதை மட்டும் ஒரு கணம்
சிந்தித்துப்பார்
ஆணின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் உனக்குக்கிடைத்த வரமாய் உன் காதலியைப் போற்றுவாய்
மாற்றொரு தெரிவினை மேற்கொள்ள சந்நர்ப்பம் கொடுக்காமல்

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...