Saturday, November 16, 2019

அரசி(ன்இ)யல்



என் சக்கரை நிலவே
என்றும் உன்னிடம் முறையிடுவது போல்
இன்றும் உன்னிடம் தான் முறையிடப்போகின்றேன்
கருந்திரைகளுக்குப் பின் ஒழிந்துகொள்ளாதே
போதை தலைக்கேறி பிதற்றிடவிட
உன்னிடம் வரவில்லை
உள்ளூரும் கள்ளப் பொய்தன்னை
பொல்லாப்பில்லா போதனை
செய்ய வரவில்லை
பசுமரத்தில் பதியவைத்த ஆணி இது
பாறையில் செதுக்கிய சிற்பமிது
எவனோ வரைந்த வர்ணக்கோலமிது
வானவில்லாய் வளைந்து வளைந்து
என் நினைவில் அம்பும் வில்லுமாய் குறி பார்க்கிறது
நாளைய தேர்தலில் வாக்கெடுப்புகளை
கணிசமாய்க் கூற நான் வல்லமை 
படைத்திராமல் இருக்கலாம்
ஆட்சியில் மாற்றங்கள் வந்து 
மாயைக்கு இழுத்துச் செல்லலாம்
மத்தாப்புக்கும் மதுபானங்களுக்கும்
வரிகுறைக்கப்படலாம்
ஆவணக்கொலைகளுக்கும் அவரவர் பழிகளுக்கும்
அரசு செவிசாய்க்கலாம்
கஞ்சாக்களும் கசிப்பும் கைத்துவக்கும்
சட்டைப்பாக்கெட்டில் கொட்டிக்கிடக்கலாம்
தர்மம் செய்ய சில்லறைகளும் தாளாய் மாறலாம்
குளு குளு பெட்டிகளும் வர்ணதிரைகளும்
வீட்டில் பெருமை சேர்க்கலாம்
இவை எதுவும் சிறிதுகாலம் தான்
நிரந்தரமற்றவை நிலையற்றவை
உரிமை எடுப்பதற்காய் உரிமைகளை பறிக்கும்
கண்கட்டிவித்தை 
ஏற்கனவே எழுதப்பட்ட விதிக்கு நாடகம் 
அரங்கேற்றும் கைப்பொம்மைகள்
விருப்பம் தெரிவிக்கும் ஒரு விளையாட்டு இது
தன் பயிரை தீமூட்ட கொள்ளிக்கட்டை கொடுத்து
அனுப்பும் துர்ப்பாக்கியகாலமிது
எத்தனை பள்ளிகூடத்தில் போதித்தாலும்
தலைக்கேறா சுயசிந்தனை இது
என் கட்டாய விருப்பம் ஆனால் அவர்களின் தெரிவு
கிடைப்பதோ ஓரிரு நாள் விடுமுறை
வேறு என்ன இலாபம்?
உன்னிடம் முறையிடுவதால் நானும் ஒருவகை கோழைதான் 
எழுதியதை மாற்றியமைக்க நல்லொரு அரசியல்
விடியப்பொழுதில் கரையும் என் சக்கரை நிலவு




Friday, November 15, 2019

அகல்விளக்கின் கற்பூரம்



உனக்கான காதல் என்னிடம் 
என்றோ தோன்றிவிட்டது
பலமுறை உன்னிடம் கூறியும் விட்டேன்
கிடைக்காமல் நழுவிச்செல்லும் 
வாய்ப்புகளிற்கு நான் இடம் கொடுக்கவே இல்லை
அதற்காக நான் ஊமையும் இல்லை
நீ செவிப்புலண் அற்றவனும் இல்லை
பாவம் என் கண்ஜாடைக்குள் ஆயிரம் 
அர்த்தங்கள் அறிந்திராதவன்
என் பேச்சு வழக்கில் பல ஒப்பனைகள் 
செய்துகொண்டேன் உன் நிழல் பட்டு
கரைத்திடும் என அறியாது
இரு புருவங்கள் அகல உன்னைக் கைது 
செய்ய பதுங்கியிருந்தேன்
பாவி உன் மூச்சைத்தான் சுவாசித்து 
தினம் உயிர்பிழைக்கின்றேன் 
என சிந்தைகொள்ளாமல் 
இரவில் வாடும் வெண்மதியும் நானும்
கைகோர்த்து உன்னைப்பற்றித்தான் எத்தனை 
நாட்களாய் பேசியிருப்போம்
தோட்டத்தின் நடு மாமரத்தில் 
கனியும் கசக்க உன் நினைவினால் 
பலமுறை சிரித்திருப்பேன்
என்ன செய்வது எனக்குள் தோன்றிய 
முதற்காதலும் நீ என் இறுதிக்காதலும் நீ
தேகத்தை நீரில் கரைத்து மழைத்தூறலாய் 
உன் மீது பொழியவா?
என் கனவுகள் அனைத்தும் காற்றாய் சரிசெய்து
உன்னை சுவாசிக்கச்செய்யவா?
அருவமாய் உன் ஆவி உன்னைச்சுமக்கும்
என் ஆசைக்காதலை என்றுதான் புரிந்துகொள்வாயோ?
மலரும் நாட்களுக்கு விதையாய் காதல் விருட்சக்கனி சுவைக்க மனதோடு 
காலமெல்லாம் காதலோடு கரையும் 
என் அகல்விளக்கின் கற்பூரம்

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...