Friday, October 12, 2018

அதுவோ காதல்



முடித்துக்கொள்ள எண்ணித் துணிகையில்
அரும்பியது உன்மேல் புது நேசம்
பாவம் இவள் பைத்தியக்காரி
அதற்கு பெயர் வைத்தாள் அதுவோ காதல்
ஓடும் திசை தெரியாப் பறவையாக 
காற்றைக் கிழித்துக் கொண்டு செல்கின்றேன் நான்
இறக்கைகளும் வலிக்கின்றன
ஓய்வெடுக்க தங்குமடங்கள் பல உண்டு
மனம்தான் இல்லை.
மனம் வைத்து நேசித்தேன் உன்னை
மறுபடியும் திசையறியாமல் பறக்கச் செய்தாய் என்னை
முடித்துக்கொள்ள துணிந்துவிட்டேன் என் பயணத்தை
இதுதான் இந்தப் பறவையின் வாழ்க்கை

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...