Friday, October 12, 2018

எப்படிக்கூறுவேன்



எப்படிக்கூறுவேன்
உன் கை விரல்களுக்கு துணை என் கை விரல்கள் என்று
உன் காலடி வழி என் பாதசுவடுகள் என்று
உன் தலையணையாக என் மடி என்று
உன் தலைமுடி கோத என் கைவிரல்கள் என்று
உன் தேகம் தழுவ என் ஸ்பரிசம் என்று
உன் பார்வைக்கு மறுமொழி என் மௌனம் என்று
உன் இரவுகள் நீள என் கதை என்று
உன் உதடு வழி பருக்கை என் அமிர்தம் என்று
உன் நெற்றி வியர்வை என் சேலையில் என்று
உன் அரவணைப்பு என் காலைத் தேநீர் என்று
உன் முத்தச்சுவடு என் கன்னம் பெற்ற பொக்கிஷம் என்று
உன் அசைவுக்கு முன் என் இசைவு என்று
உன் குறும்புகளுக்கு குழந்தை என் கூச்சம் என்று
உன் புன்னகை எல்லாம் என் தவம் என்று
உன் சோர்வை தணிக்கும் என் தாய்மை என்று
உன் பசிக்கு ஆகாரம் என் காதல் என்று
உன் முதுமையில் இளமை நான் தான் என்று
உன் கேள்வியின் பதிலே நீ தான் என்று

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...