Saturday, October 13, 2018

உன் வருகைக்காக காத்திருக்கும் நான்


எத்தனை தவங்கள்
எத்தனை மன்றாடல்கள்
எத்தனை கெஞ்சல்களின் பின் 
நீ என்னிடம் வந்து சேர்ந்தாய்
அத்தனையும் பொய்யாக்கியது போல மறுபடியும்
என்னை உதாசீனப்படுத்திவிட்டாய்
இருவரின் கைகளும் கோர்க்கப்பட்டு
கனவுகள் பிணைக்கப்பட்டு
வார்த்தைகள் உரசப்பட்டு
எம் எதிர்காலத்தை வர்ணம் தீட்டினோமே
யாரும் வரையாத கோலமாய் எம் இருவரின் வாழ்க்கையை சித்தரிக்க
அதை அலங்கோலமாக்கியது ஏனோ?
நிழலாய் வேண்டாம் ஒளியுடன் போய்விடும்
கனவாய் வேண்டாம் துயில் எழுந்தபின் கலைந்திடும்
உயிராய் வேண்டாம் உடல் இறந்தபின் தொலைந்திடும்
மணமாய் வேண்டாம் மலர் வாடியபின் உறங்கிடும்
சுவையாய் வேண்டாம் புலன் அற்றதும் மறத்துப்போய்விடும்
காற்றாய் வேண்டாம் பூமியோடு செறிவு குறைந்திடும்
திங்களாய் வேண்டாம் ஞாயிறு வந்திடும்
நீராய் வேண்டாம் நிலை மாறிடும்
இரயிலாய் வேண்டாம் தடம் புரண்டிடும்
கால் தடங்களாய் வேண்டாம் பாதை மாறிடும்
எதுவாய் என்னை நீ இருக்கச் சொல்கின்றாயோ
உன்னைப் பிரியாவண்ணம் உன்னைத் தொடர
புதிதாக ஒன்றைக் கண்டு பிடித்து வந்திடு
வரமாட்டாய் என அறிந்தும் உன் வருகைக்காக காத்திருக்கும் நான்

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...