Friday, October 12, 2018

என்னளவில் அகரம்

அன்பு
நான் வாழ்வதற்கு ஆதாரம்
அழகு
உள்ளதில் காணவேண்டிய பண்பு
அறிவு
மற்றவர்முன் என்னை உயர்த்துவது
அடக்கம்
சான்றோரின் முன் காட்டவேண்டியது
அகம்பாவம்
அழிவிற்கு ஆரம்பம்
ஆக்கம்
என்னுள் உள்ள படைப்பு
ஆதரவு
தளர்ந்துபோன இதயத்திற்கு
ஆசை
நான் கனவில் தீர்த்துக்கொள்வது
ஆடம்பரம்
விருந்தோம்பலில் இருக்க வேண்டியது
இசை
தனிமையின் துணை
இறைவன்
மனிதரை மனிதராய் மதிப்பவன்
ஈட்டி
நீ அடுத்தவரை சொல்லால் வைக்கும் குறி
உண்மை
அரிதாய் கிடைக்கும் அழிவற்ற சக்தி
உணவு
சிலருக்கு கிடைக்காத பலர் வீணாக்கும் கொடை
ஊக்கம்
கை விடக்கூடாத ஒன்று
எளிமை
உன்னை அலங்கரிக்கும் அணிகலன்
எண்ணம்
சக்திவாய்ந்த ஆயுதம்
ஏமாற்றம்
நான் பெற்ற வரம்
ஏளனம்
தன்னிலை மறந்த பலர் செய்யும் செயல்
ஏக்கம்
ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரி
ஐயம்
உறவுக்கு கேடு
ஒன்று
ஒரு செயலில் மனம் இருக்க வேண்டியது
ஒழுக்கம்
தாய் தந்தையின் வளர்ப்பை குறிப்பது
ஓடம்
நான் வாழும் வாழ்க்கை
ஔவியம்
ஔவை சொன்ன மொழி                                                                                                                             
அம்மா என்னுடன் வாழும் என்னை வாழ வைக்கும் தெய்வம்                                                                                  அப்பா நான் சிறுவயதில் தொலைத்த பொக்கிஷம்

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...