பதிவுத் திருமணமும் முடிந்துவிட்டது
சட்ட ரீதியாக மட்டும் மனைவி ஆகிவிட்டேன்
ஊர் அறிய உறவறிய திருமணத்திற்கு நாள் பார்க்கிறாள்
உன் மாமியார்
தடபுடலாய் சமையலுக்கு ஆள் தேடுகின்றான் உன் மூத்த மச்சான்
மண்டபம் அலங்காரம் பத்திரிகையில் நேரத்தைப் போக்காட்டுகின்றான் உன் இளைய மச்சான்
அறிவுரையும் சமையல் கலையும் அழகுக்கலையிலும் நிபுணத்துவம் பெறுகிறாள் உன் மைத்துனி
நான் மட்டும் உன் நினைவாய் எம் சந்திப்பிற்காய் காத்திருக்கின்றேன்
அனைவரும் கோவில் சென்றுவிட்டார்கள்
நான் மட்டும் தனிமையில் உன் நினைவுகளோடு
எதேற்சையாய் நீயும் வந்தாய் இது கனவல்ல மறக்க முடியா நினைவு
காதல் புரிய இதுவல்லவோ சிறந்த நேரம் என நான் நாணம் கொட்ட என் அருகில் வந்த நீயோ என் கண்களை தின்பதாய் பார்க்கிறாய்
நாணம் கொஞ்சம் வெட்கமாய் மாறிட என் பெண்மைக்கான கூச்சத்தை ஓரம் கட்டி உன்னிடம் கேட்டேன்
“ ஏன் இன்னும் இந்த இடைவெளி?”
செல்லமாய் என் கன்னத்தைத் தட்டியவாறு கூறினாய்
“ஊரார் ஆசியுடன் உன்னை மனைவி ஆக்கிய பின் இனி ஏது இந்த இடைவெளி “
கண்கலங்கிய என் கண்மடலைத் துடைத்தபடியே பார்க்கின்றாய்
அதில் தெரிந்ததோ உன் ஆண்மையின் அடையாளம்
அருமையான வரிகள். ஆழமான கருத்துக்கள். மிக்க மகிழ்ச்சி .
ReplyDeletethnx akka
ReplyDeleteWow! Great expression!
ReplyDeleteWith your blessings
Delete