Thursday, October 11, 2018

காதல் கொண்டேன் பெண்ணே

நீள் கருங்கூந்தலிலும் இல்லை
வளைந்தெடுத்த புருவங்களிலும் இல்லை
செவ்விதழ் ரேகையிலும் இல்லை
பஞ்சணை மேனியிலும் இல்லை
செஞ்சந்தன நிறத்திலும் இல்லை
தாமரைப் பாதங்களிலும் இல்லை
வெண்மெழுகு நகத்திலும் இல்லை
காந்தவிழி அழகிலும் இல்லை
மென்மொழி செப்புதலிலும் இல்லை
கொச்சை பேசும் உலகம்தனை ஓரம்கட்டி
நித்தம் நெஞ்சில் துணிவுடன் ஒற்றை வழிப்பாதையில்
தடம் பதித்து செல்கையில் உன் திமிர் கண்டு
நான் காதல் கொண்டேன் பெண்ணே




No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

பெண்ணுக்குள் தேவதை

  பெண்ணுக்குள் புதிதாய் ஓர்  தேவதை பிறக்கின்றாள் அவள் வர்ணமற்றவள் அவள் உருவமற்றவள் அவள் உணர்வுகளால் வர்ணம் கொண்டு உணர்ச்சிகளாய் உருவம் கொள்க...