Sunday, October 21, 2018

பழைய புத்தகத்தில் நடுப்பக்கத்து மயிலிறகாய்


விதிகளைத் தளர்த்தெறிந்த 
வரைமுறையற்ற பார்வை வீச்சினால்
வன்முறைகள் பல செய்கிறாய்
தூரம் நான் தேடி நின்றாலும்
என் பேர் சொல்லிய வெப்பம் நிரம்பிய
உன் சுவாசக்காற்றால்
வலிமை இழக்கச் செய்கிறாய்
ஆணுக்கான திமிர் நிறைந்த தோரணையில்
எப்பக்கமும் சாயாக் கொடி என்னை
மெழுகுசிலையாய் உருக வைத்தாய்
இத்தனை அழகாய் சொல்லாக்காதலை
ஒரு சொல்லில் உதட்டோடு வருடிவிட
எத்தனை வருடமாய் நானும் காத்திருக்க
இது உன் விதி என எழுதி வைக்கா என் காதல் காவியத்தை
முடித்து வைத்தது காலம் எனும் விதி
இனி எங்கு சொல்லப் போகிறாய்
சொல்லா உன் காதல் கதையின் கதாநாயகி
பழைய புத்தகத்தில் நடுப்பக்கத்து மயிலிறகாய்
உன் நினைவுடன் மடிந்து கிடக்கின்றேன்

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...