Sunday, May 12, 2019

மௌனராகம்





நான் பாடும் மௌனராகம்
இது ஒவ்வோர் மனதிலும் ஓடும் 
ஒருதலை ராகம்
இசை மீட்பதிலும் அதில் 
கானம் மெய்சிலிர்ப்பதிலும்
காதால் இரசிப்பதிலும் தான்
சுவைக்கப்பட்ட ராகம்
மௌனமாய் விழிகளில் வீணை
வாசிப்பதிலும் நெஞ்சார உறுத்தப்படுகிறது
சொல்லிய வார்த்தைகளுக்கு பல பொருள்
அர்த்தமாகிட சொல்ல வார்த்தைகளுக்குப்
பரிசாய் மௌனங்கள் நீடிக்கையில் 
என் ஒருதலை ராகம் மீட்டிப்பார்கிறேன்
வெளிப்படையாய் கூறமுடியாத சில ராகம்
மௌனத்தில் மட்டும் மௌனத்துடன் மௌனமாய்
பல கதைகள் பேசிடும் ஒருதலைராகம்
வெட்கம் காதல் அன்பு கோபம் வெறுப்பு 
சகிப்புத்தன்மை குற்றுணர்வு மனிதம்
பெண்ணியம் கடமை கற்பு ஏதோ ஒன்றாய்
மறைக்கப்படும் ஒவ்வோர் உணர்வும் சொல்லாத மௌனராகம் தான்

சைக்கோவின் காதல்





என்றுமில்லாதவாறு இன்றுமட்டும் 
ஏன் என் முகத்தில் ஒரு புன்னகை 
ஓடுகிற மின்விசிறியையும் மீறி 
நினைவுகள் எங்கோ ஓடிச்செல்கின்றன
கதிரை மேசைகளில் கோலம் போடத்தான் 
கைநகத்தினை சீராக்கி வைத்திருந்தேனா
புன்னகைக்கும் ஒவ்வொரு இடைவெளிக்கும் 
மூச்சுக்காற்று உனக்கானதாய் நெஞ்சை உரசிச் சென்றது
நீ எனக்கானவன் நீ எனக்குமட்டுமே ஆளானவன்
இந்த கர்வம் தான் இத்தனைக்கும் காரணமா
எத்தனை சண்டைகள் எத்தனை அழுகைகள்
சிரிப்பாக வருகின்றது அனைத்தும்
நம் குழந்தைகளுக்கு உணவூட்டும் போது நிச்சயம் 
இந்தக்கதைகளைச் சொல்லி அம்மாச் செல்லமாக்கிவிட வேண்டும் என்ற எண்ணமும் பனைமரத்தையும் தாண்டி வேலி போட்டது. எளிதில் பிடித்துவிட முடியுமா 
அதனால்தான் தேக்கி வைத்திருக்கின்றேன் கற்பனைகளை எல்லாம் 
கவிதை வரிகளாக.
உனக்கு ஆயுள் நூறு. வேண்டாம் நான் இறப்பதற்கு ஒரு நிமிடம் முன். 
கடைசி வரை உனக்கான சேவைகளை முடித்துக்கொண்டபின். 
எனக்கு என்ன செய்தி சொல்லப்போகின்றாய்
முதலில் என் நலன் விசாரிப்பாயா?
என் அணைப்பு வேண்டும் என்பாயா?
உன் சோகம் பகிர்ந்து கொள்வாயா?
ம்ம்ம்ம்ம் ஏதும் நல்ல செய்தி?
சரி சொல்லுடா 
வேண்டாம் போதும் வலிக்கிறது 
இதற்குமேல் என்னால் தாங்கமுடியாது
துண்டித்துக்கொள் அனைத்து அழைப்புகளையும்
அனைத்திலும் என்னை முடக்கிக்கொள்
வழமைபோலதான் நானும்
ஏன் என் முகத்தில் ஒரு புன்னகை 
ஓடுகிற மின்விசிறியையும் மீறி 
நினைவுகள் எங்கோ ஓடிச்செல்கின்றன
கதிரை மேசைகளில் கோலம் போடத்தான் 
கைநகத்தினை சீராக்கி வைத்திருந்தேனா
புன்னகைக்கும் ஒவ்வொரு இடைவெளிக்கும் 
மூச்சுக்காற்று உனக்கானதாய் நெஞ்சை உரசிச் சென்றது. இனி
நீ எனக்காவும் இல்லை எனக்காக உன்னிடமும் எதுவுமில்லை. 
இப்படியே என் நாட்களைக் கடத்திச்செல்கின்றேன்
கற்களும் சீமைந்துமாய் அலங்கரிக்கப்பட்ட 
உன் நினைவுகளுடன் மட்டும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் என்னை 
என்னால் அடையாளம் காட்டமுடியாத சைக்கோக்காதலியாய்

Wednesday, May 8, 2019

மௌனமான இரவு


இந்த இரவை மட்டும் பரிசாய்க் கொடுத்திடு
எனக்கான பல கேள்விகள் இருக்கு அதில் 
உன் மௌனம் மட்டும் பரிசாய்க் கொடுத்திடு 
என் உதடுகள் உன் பெயரை பல முறை சொல்லக்கூடும் 
உன் காதோரம் வெப்பக்காற்று வீசக்கூடும் 
பார்வைகள் இருட்டின் வெளிச்சத்தில் கெஞ்சக்கூடும் ஆனாலும் 
உன் மௌனமான பார்வையை மட்டும் 
பரிசாய்க் கொடுத்திடு 
என் வேதனைகள் எல்லாம் வார்த்தையாகிடும்
என் வலிகள் எல்லாம் கண்ணீராகிடும்
ஆனாலும் நீ மௌனமாய் என்னைப் பார்வையிடு
என் விம்மலான அழுகைக்கு உன் தழுவல் பலம் 
கொடுக்க கூடும் இருந்தாலும் மௌனமாய் இரு
எந்த அழைப்புகளையும் ஓரம்கட்டு
எந்த மொழிக்கும் செவிசாய்க்காதே
எந்த சிந்தனைகளையும் தூக்கிவீசு
எந்த நினைவுகளையும் நினைவுகொள்ளாதே
மௌனமாய் என்மீதுமட்டும் பார்வை கொள்
காந்தமான நெருக்கத்திற்கும் விரல்கள் தேடும் 
தேடல்களுக்கும் இந்த இரவை மட்டும் பரிசாய்க் கொடுத்திடு
இந்தனை நாட்கள் பிரிந்த ஏக்கத்திற்கும் என் கோபமான கொஞ்சிடும் மொழிக்கு 
இந்த இரவை மட்டும் பரிசாய்த் தந்து மௌனமாய் பார்வை வீசிடு 
உன் மார்போடு உறக்கத்தில் அதன் வலிகளைக் கரைத்துக்கொள்கின்றேன்


நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...