Thursday, October 11, 2018

மழலை நியாபகங்கள்

மயிலிறகாய் வருடிவிட்டுச் செல்கிறது 
மழலை நியாபகங்கள்
சிணுங்களுடன் தூக்கக்கலக்கத்தில்
அம்மாவிடம் பெற்ற முத்தங்கள்
பஞ்சுமிட்டாஸ் வாங்க உண்டியலில் 
திருடிய சில்லறைகள்
பிக்காசோவை மிஞ்சிவிடும் சுவரின் மீது நான் வரைந்த கிறுக்கல்கள்
தீப்பெட்டிக்குள் அடைத்து வைத்து
அழகு பார்த்த மின்மினிப்பூச்சிகள்
சமைக்க வைத்த அரிசியை அம்மா அறியாமல்
நான் தூவிட விருந்தாளியாய் வந்த மைனாக்கள்
பொம்மையைத் தூங்க வைக்க நான் பிதற்றிய
மழலை மொழிக் கதைகள்
விடிந்த பின்னும் எழ விடாமல் இன்னும்
தூங்க வைக்கும் கற்பனைக் கனவுகள்
ஆண்குழந்தை போல் அப்பாவிடம்
அடிவாங்க நான் செய்த குறும்புகள்
இன்னும் எத்தனையோ சுகமான நினைவுகள்
நினைத்துப்பார்த்திடவே முகத்தில் பூக்கின்றது புன்னகைகள்


No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...