Friday, October 12, 2018

என்னளவில் அகரம்

அன்பு
நான் வாழ்வதற்கு ஆதாரம்
அழகு
உள்ளதில் காணவேண்டிய பண்பு
அறிவு
மற்றவர்முன் என்னை உயர்த்துவது
அடக்கம்
சான்றோரின் முன் காட்டவேண்டியது
அகம்பாவம்
அழிவிற்கு ஆரம்பம்
ஆக்கம்
என்னுள் உள்ள படைப்பு
ஆதரவு
தளர்ந்துபோன இதயத்திற்கு
ஆசை
நான் கனவில் தீர்த்துக்கொள்வது
ஆடம்பரம்
விருந்தோம்பலில் இருக்க வேண்டியது
இசை
தனிமையின் துணை
இறைவன்
மனிதரை மனிதராய் மதிப்பவன்
ஈட்டி
நீ அடுத்தவரை சொல்லால் வைக்கும் குறி
உண்மை
அரிதாய் கிடைக்கும் அழிவற்ற சக்தி
உணவு
சிலருக்கு கிடைக்காத பலர் வீணாக்கும் கொடை
ஊக்கம்
கை விடக்கூடாத ஒன்று
எளிமை
உன்னை அலங்கரிக்கும் அணிகலன்
எண்ணம்
சக்திவாய்ந்த ஆயுதம்
ஏமாற்றம்
நான் பெற்ற வரம்
ஏளனம்
தன்னிலை மறந்த பலர் செய்யும் செயல்
ஏக்கம்
ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரி
ஐயம்
உறவுக்கு கேடு
ஒன்று
ஒரு செயலில் மனம் இருக்க வேண்டியது
ஒழுக்கம்
தாய் தந்தையின் வளர்ப்பை குறிப்பது
ஓடம்
நான் வாழும் வாழ்க்கை
ஔவியம்
ஔவை சொன்ன மொழி                                                                                                                             
அம்மா என்னுடன் வாழும் என்னை வாழ வைக்கும் தெய்வம்                                                                                  அப்பா நான் சிறுவயதில் தொலைத்த பொக்கிஷம்

காதல் அகதி

உன் பார்வைப் போரில் சிக்குண்டு
உன் இதயத்தில் நிரந்தரமாய்க் குடியேறிட
என் கோபம் திமிர் கர்வம் உடைமைகளைக் கழைந்துவிட்டு
உன் நிழல் மட்டுமே என் சொந்தம் என்று
அன்பை மட்டும் பாத்திரமாய் ஏந்தி 
ஆயுள் முழுவதும் உன் வசமாக்கிட
காதல் அகதி ஆனேனே

ஞாபக மறதி அனைவருக்கும் கிடைக்காத வரம்

ஞாபக மறதி அனைவருக்கும் கிடைக்காத வரம்
சிலரின் செயலை
சிலரின் ஞாபகங்களை
சிலரின் வார்த்தைகளை
சிலரின் கோபங்களை
சிலரின் பிரிவை
சிலரின் வரவை
சிலரின் மௌனங்களை
சிலரின் புன்னகையை
சிலரின் அனுதாபங்களை
சிலரின் சவால்களை
சிலரின் சுயநலத்தை
சிலரின் அன்பை
சிலரின் நேசத்தை
சிலரின் வலியை
இன்னும் ஞாபகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

எப்படிக்கூறுவேன்



எப்படிக்கூறுவேன்
உன் கை விரல்களுக்கு துணை என் கை விரல்கள் என்று
உன் காலடி வழி என் பாதசுவடுகள் என்று
உன் தலையணையாக என் மடி என்று
உன் தலைமுடி கோத என் கைவிரல்கள் என்று
உன் தேகம் தழுவ என் ஸ்பரிசம் என்று
உன் பார்வைக்கு மறுமொழி என் மௌனம் என்று
உன் இரவுகள் நீள என் கதை என்று
உன் உதடு வழி பருக்கை என் அமிர்தம் என்று
உன் நெற்றி வியர்வை என் சேலையில் என்று
உன் அரவணைப்பு என் காலைத் தேநீர் என்று
உன் முத்தச்சுவடு என் கன்னம் பெற்ற பொக்கிஷம் என்று
உன் அசைவுக்கு முன் என் இசைவு என்று
உன் குறும்புகளுக்கு குழந்தை என் கூச்சம் என்று
உன் புன்னகை எல்லாம் என் தவம் என்று
உன் சோர்வை தணிக்கும் என் தாய்மை என்று
உன் பசிக்கு ஆகாரம் என் காதல் என்று
உன் முதுமையில் இளமை நான் தான் என்று
உன் கேள்வியின் பதிலே நீ தான் என்று

அதுவோ காதல்



முடித்துக்கொள்ள எண்ணித் துணிகையில்
அரும்பியது உன்மேல் புது நேசம்
பாவம் இவள் பைத்தியக்காரி
அதற்கு பெயர் வைத்தாள் அதுவோ காதல்
ஓடும் திசை தெரியாப் பறவையாக 
காற்றைக் கிழித்துக் கொண்டு செல்கின்றேன் நான்
இறக்கைகளும் வலிக்கின்றன
ஓய்வெடுக்க தங்குமடங்கள் பல உண்டு
மனம்தான் இல்லை.
மனம் வைத்து நேசித்தேன் உன்னை
மறுபடியும் திசையறியாமல் பறக்கச் செய்தாய் என்னை
முடித்துக்கொள்ள துணிந்துவிட்டேன் என் பயணத்தை
இதுதான் இந்தப் பறவையின் வாழ்க்கை

மாற்றாள் காதலன்

ஆண்மகனே!
உன்னிடம் வேண்டுதல் விடுக்கவும் கோரிக்கை வைக்கவும்
என்னிடம் தகுதி இல்லை
ஆனால் ஒன்றைக் கூறுகின்றேன் சற்று
செவிமடுத்தால் போதும்
என்றொரு பெண்ணை நீ உள்ளத்தாலும் உடலாலும்
நேசிக்கத் தொடங்கினாயோ
அன்றே அவள் மனதில் தாழி கட்டா கணவன் எனும்
மதிப்பை அடைந்துவிட்டாய்
அதன்பின் அவள் அழைப்புகளும் நடத்தைகளும்
உன்னைத் தாங்கிடும் வண்ணமே இருக்கும்
நீ கவலை கொண்டால் அவள் கண்ணீர் வடிப்பாள்
நீ கோபம் கொண்டால் அவள் பணிந்து போவாள்
நீ பசி கொண்டால் அவள் ஆகாரமாகுவாள்
நீ சோர்வு கொண்டால் அவள் புத்துணர்வாக்குவாள்
இப்படி உனாக்காக தன்நிலையை மாற்றிக் கொள்வாள்
ஆனால் உன்னால் உருவாகும் பந்தத்தில் ஏமாற்றம் வந்தால் அதைத் தாங்கமாட்டாள்
பெண்களின் குணநிலையில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உறைப்பு, உவர்ப்பு எனப் பாகுபாடு உண்டுதான்
ஆனால் உள்ளத்தில் உனக்காக உள்ள அன்பு மட்டும் என்றும் ஒன்றுதான்
தெரிவு செய்வதில் நிதானம் கொள் அல்லது தெரிவினை தள்ளிவை
புதியன புகுதலிலும் பழையன கழிவதிலும் காதலைப் பிரயோகிக்காதே
உன் அன்னையை மதிக்காதவனாய் நீ இருக்கலாம்
உன் சகோதரிகளுக்கு பொறுப்பற்றவனாய் இருக்கலாம்
உன் காதலிக்கு ஏமாற்றுக்காரனாயும் இருக்கலாம்
ஆனால் நாளை பிறக்க இருக்கும் உன் பெண்குழந்தைக்கு
உண்மையான தந்தையாய் இருப்பதை மட்டும் ஒரு கணம்
சிந்தித்துப்பார்
ஆணின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் உனக்குக்கிடைத்த வரமாய் உன் காதலியைப் போற்றுவாய்
மாற்றொரு தெரிவினை மேற்கொள்ள சந்நர்ப்பம் கொடுக்காமல்

Thursday, October 11, 2018

நேரத்தை வீணாக்காதீர்கள்



வசந்தகாலம் என எண்ணி பயணித்தேன் உன்னுடன்
இலையுதிர்காலமாய் எனை நீங்கிச் சென்றாய்
கருமுகில் சூழ் கார்காலமாய் கண்கள் நீர் மூழ்கிடக் கேட்டேன் திரும்பி வந்துவிடு என்று
சொல்லில் கோடை காலம் கம்பீரமாக என்னை விரட்டியது
இருந்தும் மீண்டுமொரு வசந்தகாலம் வராதா என 
துளிர்விட்டு உனக்காக காத்திருந்தேன்
கிடைத்தது உன் திருமணப்பத்திரிக்கை
மணப்பெண் என்று யாரயோ குறிப்பிட்டு
என் கண்ணீர் காற்றில் கரைந்து போனது
என் தவிப்பு தவிடு பொடியானது
என் நினைவலை உன்னைவிட்டு நிலைகுலைந்து போனது
காலங்கள் மாறி மாறி மாறிக்கொண்டே இருக்கிறது
ஆனால் என்னால் மட்டும் மறந்தும் மாறிவிட முடியவில்லை
இடி விழுந்த மரமாய் உணர்வற்று இருக்கின்றேன்
இனி எக்காலமும் என்னில் எந்த காலமும் நிகழாது
யாரும் தண்ணீர் ஊற்றி நேரத்தை வீணாக்காதீர்கள்

மழலை நியாபகங்கள்

மயிலிறகாய் வருடிவிட்டுச் செல்கிறது 
மழலை நியாபகங்கள்
சிணுங்களுடன் தூக்கக்கலக்கத்தில்
அம்மாவிடம் பெற்ற முத்தங்கள்
பஞ்சுமிட்டாஸ் வாங்க உண்டியலில் 
திருடிய சில்லறைகள்
பிக்காசோவை மிஞ்சிவிடும் சுவரின் மீது நான் வரைந்த கிறுக்கல்கள்
தீப்பெட்டிக்குள் அடைத்து வைத்து
அழகு பார்த்த மின்மினிப்பூச்சிகள்
சமைக்க வைத்த அரிசியை அம்மா அறியாமல்
நான் தூவிட விருந்தாளியாய் வந்த மைனாக்கள்
பொம்மையைத் தூங்க வைக்க நான் பிதற்றிய
மழலை மொழிக் கதைகள்
விடிந்த பின்னும் எழ விடாமல் இன்னும்
தூங்க வைக்கும் கற்பனைக் கனவுகள்
ஆண்குழந்தை போல் அப்பாவிடம்
அடிவாங்க நான் செய்த குறும்புகள்
இன்னும் எத்தனையோ சுகமான நினைவுகள்
நினைத்துப்பார்த்திடவே முகத்தில் பூக்கின்றது புன்னகைகள்


நான் வரைந்த சித்திரத்தை நீ அறிவாயா அம்மா❤️

குழந்தையாய் உன் கரத்தில் தவழ்ந்தபோது என்னை அரவணைத்து தந்தாய் முதல் முத்தம்
உன் ஓசை கேட்டு திரும்பிய என் புன்னகைக்கு
கண்மணி என்னைக் கண்டு கொண்டாய் என இரண்டாம் முத்தம்
உன் மொழி பேசிட நான் முயற்சித்து பல ஓசைகள் எழுப்பிடத் தந்தாய் மூன்றாம் முத்தம்
பிஞ்சு விரல் நீட்டி உன்னைத் தொட்டு புன்னகைக்கையில் 

உள்ளங்கைகளில் தந்தாய் நான்காவது முத்தம்
பசி தீர்க்கும் போது உன் முகம் கண்டு அருந்திய அமிர்தம்
வாசனை நுகரந்து தந்தாய் ஐந்தாவது முத்தம்
உன் கருங்கூந்தல் தன்னை இறுகப் பற்றிக் கொண்ட நான்
என்னை விட்டு அகலாதே என சமிஞ்சை செய்திட
கெஞ்சலுடன் தந்தாய் ஆறாவது முத்தம்
உன்னையும் தான்டி புதிய உலகமாய் தந்தையை அறிமுகம் செய்து பெருமையுடன் தந்தாய் ஏழாவது முத்தம்
நான் ஈன்றெடுத்த பொக்கிஷம் என்று ஊரறியக் கூறி
கவர்வமாய்த் தந்தாய் எட்டாவது முத்தம்
வெயிலோ மழையோ பிணியோ குளிரோ எதுவும் உன்னைத் தாண்டி வராமல் காத்துத் தந்தாய் ஒன்பதாவது முத்தம்
பல முயற்சியின் பின் சற்றும் தழராத நான்
அம்மா எனக்கூறிட ஓட்டு மொத்த அன்பையும் கொட்டி
திகட்டாமல் என் உயிரே எனத்தந்தாய் பத்தாவது முத்தம்
இந்த பத்து முத்தங்களை நான் என்றும் மறவேன் அதுபோல்
பத்து மாதம் கருவறையில் முத்தத்தால் நான் வரைந்த சித்திரத்தை நீ அறிவாயா அம்மா
❤️

புறாக்குஞ்சு




அழகியதொரு புறாக்கூடு 
என் அப்பா தேடித்தேடி எனக்காய் கட்டிய கூடு
அம்மாவும் நானும் என் உடன்பிறப்புக்களும் வாழ
சிக்கனமாய் சேமித்த உழைப்பில் நெய்யப்பட்ட கூடு
பலத்த காற்று இல்லை இல்லை சிறு சூறாவளி வீச 
சிறகு விரித்து காத்திருந்தார் என் அப்பா
கிடைத்த இரையை எமக்கு பகிரவே உம் உழைப்பு போதுமாயிற்று அப்பா
இருந்தும் சேமித்து உமக்கும் தந்தாள் என் அம்மா
என் உடன் பிறப்புக்கள் முட்டையை விட்டு வெளியே
வந்து விட்டார்கள் நான் வெளிவர நாளாகும் அப்பா
கருவிலிருந்து உம்மை நேசிக்கின்றேன் அப்பா
இந்த முறை சூறாவளி இல்லை கொடிய விஷப்பாம்பு
உம்மைத் தீண்ட கவனமாக இரு மகளே எனக் கூறி உயிர் மாய்த்தீர் அப்பா
அம்மா இம்முறை எம்மீது உம் கவனமும் அக்கறையும் கூடிடவே அப்பாவின் இடத்தில் தந்தையானவள் ஆகினாள்
மற்றைய குஞ்சுகள் வளர்ந்துவிட்டன இப்பொழுது இரை தேடச் சென்றுவிட்டன
அவர்களுக்கும் நம் போன்ற கூடு அமைய நினைத்தீர்கள் ஒவ்வொரு திசையில் அமைத்துக் கொண்டார்கள்
கடைசிக் குஞ்சு நான் முட்டையை விட்டு வந்துவிட்டேன்
பெரிய உலகம்தான் சுற்றிவரக் கழுகுகள் தான் இடை இடையே என்னைப் போன்ற புறாக்குஞ்சுகள் பறப்பதற்கு தடுமாறிடவே துணையாக நிற்கின்றேன் கருவினிலே நான் கொண்ட அனுபவத்தில்
அம்மா நீ என்னையும் புதிய கூட்டிற்கு செல்லத் தூண்டுகின்றாய்
உன்னைவிட புதிய உலகம் கண்டுவிட்டேன் அதில் பிடிப்பில்லை
அப்பாவையும் உன்னையும் போல் கூட்டில் வாழத் தெரியாது
இங்கு நம் போல் புறாக்களுக்கு பதிலாக கழுகுகளே இருக்கின்றன.
நம் கூட்டில் உன் சிறகுகளுக்கிடையில் கதகதப்பில் வாழ ஆசைப்படுகின்றேன் இந்த வளர்ந்த புறாக்குஞ்சு

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...