யாருமில்லாத மாலைவேளையில்
தூறிய மழை நின்றபின் வரும்
சிலிப்பான காற்றுக்கு
சுடச்சுடத் தேநீரும்
போற்றிக்கொள்ள கதகதப்பான கம்பளியும் தான்
அவள் குரலோசை
தேங்கிக் கிடந்த என் சோகங்கள் எல்லாம்
சோ என மழை பொழிந்தார்ப்போல்
கண்கள் நீர் நிறைக்க
தெம்பில்லாத உடலுக்கு அம்மாவின் வருடல் தான்
அவள் குரலோசை
உதிரம் வற்றிய நிலையிலும் பிளவுகளை எதிர்க்கொண்ட
உடலுக்கு உதிரவாடை வீச தன் குழந்தையைக் காணும்
தாயின் கண்ணீர்தான்
அவள் குரலோசை
பல நாளாய்ப் பட்டினி கிடந்தவன்
பசித்தெழும் வேளையில்
அறுசுவையுடன் பால்பாயாசம் வரை
அன்னமிடும் அன்னலட்சுமி
அவள் குரலோசை
யார் அவள்? அவள் குரல் என்ன இத்தகைய மகத்தானதா?
இத்தனை ஒப்பீடுகளும் ஒரு பெண்ணின் குரலுக்கா போற்றப்படுகிறது? எனக் கேள்விகளை எழுப்புபவர்களுக்கு
ஒன்று கூறுகின்றேன்
அவள் தான் ஸ்வர்ணலதா
நான் தேடும் பாடல்கள் எல்லாம் சொல்ல முடியாத
ஒரு உணர்வை உண்டு பண்ணிச் செல்லும்
பைத்தியக்காரிதான் நான் ஒரு பாடலை ஆயிரம் முறை
மனதில் பதியவைத்து எத்தனை நாட்டகளாய் என் தூக்கம்
தொலைத்திருப்பேன்
காதல் என்னை வஞ்சித்ததும் சில பாடல்களை மட்டும் மீண்டும் கேட்டு பின்னனிப்பாடகியும் ஆகியிருப்பேன்
பேரூந்துத் தரிப்பிடத்தில் நான் விரும்பும் பாடலுக்காய்
எத்தனை பேரூந்துகளை வேண்டாம் என சைகை செய்திருப்பேன்
தொலைபேசியை நோட்டமிடும் நேரத்தை என் பழைய வானொலிப்பெட்டியில் சில பாடல் பாட அதை இரசித்த வண்ணம் சமையல் செய்திருப்பேன்
குளியலறையல் என் மேனி தொடுவது நான் முணுமுணுக்கும் சில பாடல்கள் தான்.
கடைசியில் தான் அறிந்தேன் அவை அனைத்தும் என் நாயகி
ஸ்வர்ணலாதாவின் குரலோசைகள்
என் வெவ்வேறு உணர்வுகளுக்கு விடையாய் அவள் பாடல் மட்டும் என்பது தான் என் ஆர்வத்தைத்தூண்டியது
குயில் பாடும் பாட்டுக்கு அதன் முகம் கண்டுதான் இரசித்திருந்தோமா? அதை எண்ணி என்னை சமாதானம் செய்துகொள்வேன்
அவன் குரல் மகத்தானது தான்
ஏதோ ஓர் உறவைத்தேடி தூக்கம் தொலைத்த ஆண்கள் கூட விரித்தபாய் தலையணையுடன்
அவள் பாடலையும் சுவாசித்துக்கொள்வர்
என் காதற்பிணிக்கு என் புலன் மாற்றவல்லது அவள் பாடல்தான். வரிகளிலா ? அவள் குரல் அலைகளிலா? அபூர்வம் தெரியவில்லை. அவள் குரல் மென்னையிலே தான் வரிகளை நான் மீள மீள உதடுகளுக்கு உணவூட்டியதுண்டு
காலதாமதமாகித்தான் அவளைத் தெரிந்துகொண்டேன் அவள் மீண்டும் பூமிக்கு வரமுடியாத நிலையில். அவள் அர்ப்பணிப்பு அறிந்தது தான் தாமதம் அவள் குரலுக்கு மட்டுமல்ல அவளுக்கும் அடிமையாகி விட்டேன்
ஒன்று மட்டும் கூறுவேன் ஏதோ ஓர் உறவைத்தேடி உணர்வைத் தொலைத்து வெளியே சிரிக்கும் இதயங்களுக்கெல்லாம் அவள் குரல் சமர்ப்பணம்
No comments:
Post a Comment
Your concern is appreciable. Thank you for the review