Thursday, May 7, 2020

எனக்கு வேறு என்னதான் வேண்டும்



அகிலத்தோனே அன்பின் மதனனே  
அருகில் நீ இருக்க 
எனக்கு வேறு என்னதான் வேண்டும்


அச்சம் மிகுந்த சூழலில் நான் இருக்கிறேன் 
என்று இறுக என் கரங்களை அணைத்துக்கொள்வாய் 
பற்றும் உன் கரங்களில் பதிந்த என் கைரேகை
உன்னில் என் விதியைக் கோர்த்திட
எனக்கு வேறு என்னதான் வேண்டும்


தனிமையில் பிதற்றிடும் போதை 
தலைக்கேற நடுக்கத்தில் இதயம் 
இரண்டுமுழம் வெளியே பதபதைக்க
உப்பிப்போன வியர்வை விழியருகே
கண்ணீராய் உருவெடுக்கமுன்
தோள்பற்றும் உன் இரு கரங்களிலும்
தன்நம்பிக்கை கொடி படர வைத்திடும்
நீ இருக்க எனக்கு 
வேறு என்னதான் வேண்டும்


கடக்கும் கரடுமுரடான கடினமான 
பாதையில் இரயில் தண்டவாளங்களாய்
தூரதேசம் போகும் நெடும்பாதை
வழி மாறி தடம் புறழும் கணமெல்லாம்
முன்னுமில்லாமல் பின்னுமில்லாமல்
என்னோடு எடுத்துவைக்கும் ஒவ்வொரு 
அடியிலும் மலரும் ரோஜா புஸ்பத்தின்
மென்மை பாதங்களில் உணரவைக்கும்
நீ இருக்க எனக்கு வேறு என்னதான் வேண்டும்


ஆயிரங்காரணங்களால் முறிந்துபோகும் 
உறவில் அன்பால் சமச்சீர்நிலை
அளக்கும் அளவுகோல் விருசபர்வா 
சர்வஜனாய் என்னை நேசத்தால் நெசவு செய்யும்
நீ இருக்க எனக்கு 
வேறு என்னதான் வேண்டும்



No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...