Saturday, May 9, 2020

முடிவு



இன்றெடுக்கப்போகும் முடிவிற்காக நான் 
தினமும் வருந்தலாம் மௌனமாய் 
இரவுகளில் கண்ணீர் சிந்தலாம் 
இந்த முடிவின் பலனை 
ஆயுள்வரை அனுபவிக்கலாம்
இதனால் என் இதயமும் இருண்ட 
பாலைவனத்தில் அடிமையாகலாம்
உணர்வுகள் இறந்துபோகலாம்
ஊமையாய் பல வார்த்தைகள் மடிந்து போகலாம்
ஆனால் இந்த முடிவில் நான் மாற்றம் காணப்போவதில்லை
இதில் என் சுயநலம் அடங்கலாம்
என் சுயமரியாதை உயரலாம்
நான் நானாகவே என்றும் வாழலாம்
ஆனால் இந்த முடிவில் மனதார எனக்கு உடன்பாடில்லை
இந்த முடிவால் பலரின் முன்விரோதங்களில் 
இருந்து சற்று தப்பித்துக்கொள்ளலாம்
இது உனக்காக எடுக்கும் முடிவு
உன் நலன் விரும்பியாய் எடுக்கும் முடிவு
உன்னால் மட்டுமே என் நலன் என்பதிற்கான முடிவு
தொடக்கத்திலே முடிவு என்கதையில் மட்டும் தான்
இதில் சுக துக்கங்கள் எல்லாம் நானாய் உருவாக்கிய 
கற்பனை உதறல்கள்
இந்த முடிவில் எனக்கு இஸ்டமில்லை
இந்த முடிவால் உனக்கு கஸ்டமில்லை
இதுபோன்ற முடிவுகள் ஒருவகை இன்பம்தான்
இதில் பயன்பெருவர் இம்முடிவினை வேண்டுவோராய் 
இருக்கும் பட்சத்தில்
இந்த முடிவு என்னை தூங்கவிடப்போவதில்லை
இந்த முடிவால் தூக்கம் என்னை விடப்போவதில்லை
மறப்பதற்காய் தூக்கம் கொள்கின்றேன் 
ஏன் மறதியின் வாயிலாய் நியாபகத்தைத் தூண்டுகிறாய் 
இந்த முடிவில் பலர் பயனாளியாகலாம்
நன்மை என்று கருதலாம் இதில் அவர்களுக்கு
பங்கும் இருக்கலாம் இம்முடிவால் பூரிப்படையலாம்
இந்த முடிவில் எனக்கு மனக்குழப்பமில்லை
இதை ஏற்க உனக்கு என்போல் மனமும் இல்லை
இந்த முடிவால் நீ நீயாகுகிறாய் நான் என்றும் 
நாமாகத்தான் இருப்பேன்
இந்த முடிவு துயரானது நீ என் 
துயரில் கூட துக்கம் விசாரிக்க 
இல்லை என்கிறது இந்த முடிவு
இன்று எடுக்காவிடின் வேறு என்றோ கட்டாயமாய்
இந்த முடிவை நீ எடுக்கத்தான் போகிறாய்
அதற்குப் பரிகாரமாய் இன்றே 
சற்றும் விருப்பமில்லாலம் நான் முடிவெடுக்கிறேன்
இதில் நீ உன் முடிவை இனி முடியாது 
என்று பொய் பேசத்தேவையில்லை
எல்லாம் முடிந்த முடிவு இனி முற்றுப்பெற்றது
இந்த முடிவில் முடியாது என்ற பேச்சுக்கு இடமில்லை
இந்த முடிவில் நீயும் நானும் திருப்ப முடியாத 
நீண்ட இடைவெளி பெறலாம்
எந்நாளும் இந்த முடிவை ஒரு நொடி 
மனதார பிழை விடுத்தோம் என தேற்றிக்கொள்ளலாம்

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...