Sunday, May 3, 2020

போதும் மாமா



காதலில் கரம் பற்றிய என்னை
கைவிடாது கரை சேர்க்க 
வசைபேச்சில் வஞ்சிப்போரிடமிருந்து
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

அடுக்களையில் அடிமுட்டாளாய்
அரிசிபுடைப்பதே அவனியாய் இருந்த என்னை
பரந்த உலகம் படைத்தது எதற்கென விழிப்பூட்டியே
எனைப்படைத்தவனாய் அடுத்தவரிடம்
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

தாரமானபின் பணி தாயாகுவதே
தள்ளாடும் வயதில் யார் துணையாய்  வருவாரோ
வருடம் தள்ள நாட்கள் எப்போ தள்ளும் என்றே
வாயில் போடுவோரின் வார்த்தைகளிற்கு
தாரத்திலும் அவள் தாய்மை உணர்கிறேன் என்றே
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

மகாகவி வரிகளில் படைத்த 
புதுமைப் பெண்ணை
நீங்கள் என் வாழ்க்கையில் 
செதுக்கலாய் வடிக்க 
சுற்றாரின் உற்றாரின் மனம் 
சலனத்துடன் தீ மூழ
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

கண்ணீரில் படகோட்டும் என் வாழ்க்கைக்கு
கலங்கரை வெளிச்சமே இந்த அன்புதான்
ஆனால் போதும் மாமா 
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்




No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...