ஒருநாள் மட்டும் வாழும் மலர்தான்
இறப்பின் வலிதனை அறிந்திடுமா
மண்மேல் மடிந்த மலரை எண்ணி
வேர்தான் கண்ணீர் வடித்திடுமா
உதிர்ந்து விழும் சருகுகளை மீண்டும்
முன்போல் மரக்கிளைகள் தாங்கிடுமா
வேடந்தாங்கல் பறவைகள் எல்லாம்
மீண்டும் பழைய கூட்டில் வாழ்ந்திடுமா
இருளில் வாழும் மனிதர்களுக்கெல்லாம்
நிவலொளி வெளிச்சம் தந்திடுமா
வெளிச்சம் தரும் சிறு மின்மினிப்பூச்சி் கண்டு
நிலவொளிதான் வான்விட்டு மறைந்திடுமா
மழைநீரைக் குடிக்கும் கடலும்
நன்நீராய் ஒருநாள் மாறிடுமா
கடல்நீரைக் குடிக்கும் முகிலுக்கு
கடல்தான் சொந்தமாகிடுமா
நிஜத்தினைத் தொடரும் நிழலினை
நிஜம்தான் அள்ளி அணைத்திடுமா
அணைக்கவில்லை என்பதால் நிழலோ
நிஜம்விட்டு தனியே போய்விடுமா
விடைகள் தெரிந்த மனமோ அமைதி கொள்ளுமா
விதிதான் கதையை மாற்றிடுமா
மறைத்தாலும் மறந்தாலும் என் காதல் பொய்யாகிடுமா
தெரிந்தாலும் மீண்டும் எந்தன் கைகூடுமா
No comments:
Post a Comment
Your concern is appreciable. Thank you for the review