Wednesday, January 26, 2022

விதி


 

ஒருநாள் மட்டும் வாழும் மலர்தான்

இறப்பின் வலிதனை அறிந்திடுமா

மண்மேல் மடிந்த மலரை எண்ணி

வேர்தான் கண்ணீர் வடித்திடுமா

உதிர்ந்து விழும் சருகுகளை மீண்டும்

முன்போல் மரக்கிளைகள் தாங்கிடுமா

வேடந்தாங்கல் பறவைகள் எல்லாம்

மீண்டும் பழைய கூட்டில் வாழ்ந்திடுமா

இருளில் வாழும் மனிதர்களுக்கெல்லாம்

நிவலொளி வெளிச்சம் தந்திடுமா

வெளிச்சம் தரும் சிறு மின்மினிப்பூச்சி் கண்டு

நிலவொளிதான் வான்விட்டு மறைந்திடுமா

மழைநீரைக் குடிக்கும் கடலும்

நன்நீராய் ஒருநாள் மாறிடுமா

கடல்நீரைக் குடிக்கும் முகிலுக்கு

கடல்தான் சொந்தமாகிடுமா

நிஜத்தினைத் தொடரும் நிழலினை

நிஜம்தான் அள்ளி அணைத்திடுமா

அணைக்கவில்லை என்பதால் நிழலோ

நிஜம்விட்டு தனியே போய்விடுமா

விடைகள் தெரிந்த மனமோ அமைதி கொள்ளுமா

விதிதான் கதையை மாற்றிடுமா

மறைத்தாலும் மறந்தாலும் என் காதல் பொய்யாகிடுமா

தெரிந்தாலும் மீண்டும் எந்தன் கைகூடுமா

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...