யாருமற்ற வேளையில் சாலையின் ஒரு ஓரமாய்
வாடைக்காற்றைக் கொஞ்சம் கடன்வாங்கி
ஏக்கம் பாதி தயக்கம் மீதி அனைத்தையும் தாண்டி
மீண்டும் புதிதாய் சந்திப்போமா
பாதி கண்களால் உன்னைப்பார்க்க நீயோ
மீதிக் கண்களால் என்னைப்பார்க்க நாமோ
பார்வைகளில் ஸ்தம்பித்துப்போன வார்த்தைகளை
மீண்டும் புதிதாய் பேசிக்கொள்வோமா
உன் மூச்சின் வெப்பம் என்னைத் தாக்க
என்னில் உன்னால் குளிர்காய்ச்சல் வீச
இடையே நழுவிச்சென்ற தென்றல் இருவரையும் ஈர்க்க
மீண்டும் புதிதாய் சுவாசிப்போமா
உன் தலைகோதிட என் கைவிரல்கள் ஏங்க
என் நகம் கடித்திட உன் பற்கள் கூச
இடையே மந்திரப்புன்னகை வேலிபோட
மீண்டும் புதிதாய் வெட்கம்கொள்வோமா
மழைத்துளியில் வெண்நிலவு நனைய
மணற்தரையோ அதைக்கையில் ஏந்த
முத்தக்குளியல் அங்கே அரங்கேற்ற
மீண்டும் புதிதாய் காதல்கொள்வோமா
கடிகாரமுள் தன்கடமையைச் செய்ய
கணப்பொழுதில் ஒரு யுகம் ஓடி மறைய
நிகழ்ந்தவையாவும் கண்ணீரில் கரைய
மீண்டும் ஒருமுறை சந்திப்போமா
No comments:
Post a Comment
Your concern is appreciable. Thank you for the review