ஒரு கணம் ஒரு நொடியும்
பிரிந்து போகாதே
என் உயிரே நீ பிரிந்தால்
நான் வெறும் பிணம்தான்
தெரிந்தும் போகாதே
மறு கணம் மறு நொடியே
வந்து சேர்ந்து கொள்வாயோ
என் உயிரே நீ இணைந்தால்
நான் மறுஜென்மம் கொள்வேன்
அறிந்தும் சேராயோ
கனவினிலும் கூட கலங்கிவிடாதே
கடலினை விட்டுத்தான் அலைகள் ஓயாதே
சிரிக்கின்ற உன் முகத்தை தினம் காணத்தான்
கனவினிலும் கறைகள் படிய நான் விடமாட்டேனே
நினைவுகளைக் கட்டி கூண்டில் போடாதே
நிஜத்தினை விட்டு நிழலும் பிரியாதே
விரலோடு விரல் சேர்ந்து கைகோர்க்கத்தான்
விதியோடு போராடி நான் தோற்கமாட்டேனே
தடுமாறும் நேரம் தலை சாய்த்திடவா
தோலோடு ஒருகுழந்தையென நான் தாங்கிடவா
மடிமீது தாலாட்டு நான் பாடிடவா
விரலோடு பலகதைகள் நான் பேசிடவா
மனதோடு பல சோகம் எல்லாம் கரைத்திட
மனம் தேடும் தேடல் நீ மட்டும் போதும்
No comments:
Post a Comment
Your concern is appreciable. Thank you for the review