Wednesday, January 26, 2022

பிரியாதே


 

ஒரு கணம் ஒரு நொடியும் 

பிரிந்து போகாதே

என் உயிரே நீ பிரிந்தால் 

நான் வெறும் பிணம்தான் 

தெரிந்தும் போகாதே


மறு கணம் மறு நொடியே 

வந்து சேர்ந்து கொள்வாயோ

என் உயிரே நீ இணைந்தால் 

நான் மறுஜென்மம் கொள்வேன்

அறிந்தும் சேராயோ


கனவினிலும் கூட கலங்கிவிடாதே

கடலினை விட்டுத்தான் அலைகள் ஓயாதே

சிரிக்கின்ற உன் முகத்தை தினம் காணத்தான்

கனவினிலும் கறைகள் படிய நான் விடமாட்டேனே


நினைவுகளைக் கட்டி கூண்டில் போடாதே

நிஜத்தினை விட்டு நிழலும் பிரியாதே

விரலோடு விரல் சேர்ந்து கைகோர்க்கத்தான்

விதியோடு போராடி நான் தோற்கமாட்டேனே


தடுமாறும் நேரம் தலை சாய்த்திடவா

தோலோடு ஒருகுழந்தையென நான் தாங்கிடவா

மடிமீது தாலாட்டு நான் பாடிடவா

விரலோடு பலகதைகள் நான் பேசிடவா

மனதோடு பல சோகம் எல்லாம் கரைத்திட

மனம் தேடும் தேடல் நீ மட்டும் போதும்


No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...