Tuesday, December 18, 2018

ராதாகிருஸ்ணன்



எப்பொழுதுதான் இவன் குழல் ஊதுவதை நிறுத்தப்போகின்றானோ தெரியவில்லை
எப்பொழுதுதான் அவள் சுயநிலை பெற்று கண்விழித்துப்பார்ப்பாளோ தெரியவில்லை

அகிலமே வியந்து ஆராதனை செய்திடும் தெய்வீகக் காதல்கதை 

இவனோ காதல் தாகம் தீர்க்க குழல் ஊதுகின்றான்

அவளோ காதல் தாகம் தீராதவளாய் மயங்கிக்கிடக்கின்றாள்
என்ன மாயம் தான் செய்தாயோ மாயக்கண்ணா
காற்று எங்கும் உந்தன் காதல் வாசம்
அதை சுவாசித்து உயிர்வாழ்கிறாள் இந்த ராதையின் நேசம்
கவர்ந்து கொள்ளும் நீலமயில் தோகைவிரித்து தன் அழகைக் காட்டிட வானமோ மெல்லிய நீலநிறம் ஆங்காங்கே தூவிட அதன் விம்பமோ தெளிந்த நீரில் தன் அழகைப் படம் போட்டுக்காட்டிட நீலக்கண்ணன் வதனமோ இவையனைத்தையும் மிஞ்சிட அதைப்பாராத ராதையோ குழல் ஓசையில் மட்டும் மூழ்கித்திழைக்கின்றாள்
மூச்சைப்பிடித்து நீண்ட நேரமாய் எந்த ராகம் கொண்டு மீட்டுகின்றானோ அதை
மூச்சையுற்று நிதானம் தவறவிடாமல் தோல்சாய்ந்தபடி காதல் செய்கிறாள் இந்த ராதை
சாதாரண மூங்கில் குழலில் அவன் உதடுபதித்து ஆழமான காதலுடன் உயிர்மூச்சை
துவாரத்தின் வழியே செலுத்தி விரல்களால் யாலம் செய்கின்றான்
யாரும் செய்யாத விந்தையாய் ஆச்சரியத்தில் உறைந்துபோய்விட்டாள்
குழல் ஊதுவதைமட்டும் நிறுத்திவிடாதே
அவள் வேறு உலகத்தில் பரமாத்மா கண்ணனின்
இசையோடு மட்டும் உயிராத்மாவாய் அஞ்சாதவாசம் செய்கின்றாள்

Thursday, November 22, 2018

ஒரு பெண் பிள்ளை வேண்டும்


ஆறு மாதமும் ஆகிவிட்டது
அடிவயிற்றில் கணமோ கூடிவிட்டது
இறுக்க அணைத்துவிட நினைக்கும் உன் நினைப்பையும்
சற்று தூரமாகத்தான் வைத்துக்கொள்ள வேண்டும்
ஆசையாய் என் விரல்பிடித்து வாரிசாய் ஆண் பிள்ளை ஒன்று
கேட்கின்றாய்
உன் ஆசைக்கு ஒரு தவணை சொல்லி இம்முறை வேண்டி நிற்கின்றேன்
உன்போல் ஒரு பெண் பிள்ளை போதும்
ஊர் முழுக்க உன் அத்தை பேரன் வரப் போகிறான் 
பஞ்சு மெத்தை சுகம் போதாது என் மடியில் தாலாட்டிட வேண்டும் என்று வைத்தியம் பார்க்கச் சென்றுவிட்டாள்
தோப்பு துறவு எல்லாம் என் பின்னே ஆளவே கருமாரி 
அருளாய் எனக்கொரு பேரன் வரப்போகிறான் என்று 
கோவில் கோவிலாய் நேர்த்தி வைத்துத் திரிகிறார் உன் மாமனார்
ஒற்றையாய் ஊரவர் உறவினர் செல்லப் பிள்ளையாய்
பெயர் பெற்ற எனக்கோ ஆசையாய் மூத்த பிள்ளை 
ஆண்குழந்தையாய் இருக்கட்டும் என்றேன்
அடம்பிடிக்கும் நீயோ
ஒரு பெண்பிள்ளை மட்டும் போதும் என 
முகத்தைச் சுழிக்கிறாய்
அடி கள்ளி பொதுவாய் ஆண்மகனைத் தான்
பெண் எதிர்பார்ப்பாள் உன் ஆசை வித்தியாசமானது என்றேன்
உன் அன்பில் திகைப்புற்ற நானோ உன் சாயலில் ஒரு பெண் பிள்ளை வேண்டும் என உறுதியாய் திடம் கொள்கின்றாய்
பெண் பிள்ளையவள் இன்னோர் வீட்டில் குடிகொள்பவள் லட்சுமிகரமாய் பெற்றெடுத்தும் இலட்சுமியுடன் தான் அவளை வரவேற்பார் பெற்றெடுத்துத்தா முத்தாய் ஒரு மகன்
இலட்மிசுமியுடன் சாமுந்திரிக லட்சணமாய் அழைத்துவருவான் ஒரு பெண்ணை
பெண்பிள்ளையவள் தந்தை தான் தன் முதல் உலகம் என்றாலும் தாயுடன் எவ்வளவு கடிந்து கொண்டாலும்
அன்னைக்காய் ஓர் இடம் அவள் மனதில் வைத்திருப்பாள்
பால் அருந்தும் போது அன்னை முகம் கண்டு சிரிந்து நிற்பாள் அவள் கூந்தலிலே வளையம் செய்து இழுத்திருப்பாள் வண்ணம் அது அடையாளம் கண்டு தாயின் திசைக்கு தலை அசைத்து நிற்பாள்
சலவை செய்துவைத்த புடவையை கட்டி அழகு பார்த்து கசக்கியிருப்பாள்
மல்லிகை அது கொடிமீது மணம் வீசவில்லை என் மகள் தலையில் சூட்டும் வரை பொழிவிழக்கவில்லை
காலில் கட்டிய கொளுசு சத்தம் அவள் இடம் காட்டிவிடும் என சிந்திக்காது மறைந்து நின்று வேடிக்கை காட்டுவாள்
ஒன்றும் அறியா அப்பாவியாய் அவளிடம் நானும் தோற்றுப்போவேன்
அவள் கூந்தல் வாரி ஜடை போட்டு அலங்கரிப்பேன்
காதுக்கு ஜிமிக்கி மாட்டி இரசித்து நிற்பேன்
பட்டுப்பாவாடை காஞ்சிபுரத்தில் எடுத்து வந்து அவள் அணிந்துவர கோவிலில் திருவிழா வைப்பேன்
விதவிதமாய் வளையல் வாங்கி அவள் கை நிறைய அழகு பார்ப்பேன்
காலையில் அவள் விழித்தெழ சேவலும் வாங்கி வைப்பேன் நல்லதாய் பல கற்றிட நூல்களும் தேக்கிவைப்பேன்
சத்துணவாய் பல கண்டறிந்து ஊட்டிடுவேன் 
சக்திமிக்க வலிமையான பெண்ணாய் அவளை மாற்றிடுவேன்
அடுப்படியில் சிறு துணைக்காய் அவளை கூப்பிடுவேன் 
என் அன்னை சொல்லிக்கொடுக்கா அனைத்தையும் 
அவளுக்கு புகட்டிடுவேன்
வயதிற்கு வந்தவுடன் சிறப்பாய் எல்லாம் செய்திடுவேன்
நான் அற்ற உலகத்தில் அவள் பாதம் பதிக்க அறிவுறை உரைத்திடுவேன் 
பெண்பிள்ளைதானே என ஏளனம் செய்யும் ஊரவர் முன்னே 
துணிச்சலாய் அவள் நடக்க பக்கபலமாய் நின்றிடுவேன்
திருமணம் அதில் அவள் மனம் கேட்டிடுவேன் திருத்தமாய் துணை தேட பொருத்தமாய் சில விடயம் காதில் ஓதிவைப்பேன் 
அச்சம் அவள் கொள்ளும் போது ஆதரவாய் வார்த்தை உரைப்பேன் எதையும் அவள் எதிர்கொள்ள ஏணிப்படியாய் தாங்கிநிற்பேன்
கரு ஒன்றை அவள் சுமக்கையில் மறுபடியும் அவளை சுமந்து செல்வேன் பிரசவறையில் அவள் வேதனை கண்டு மறுபடியும் என் வலியை பொறுத்துக்கொள்வேன்
பிள்ளை ஒன்று அவள் பெற்றெடுக்கையில் என் உயிரை கையில் வைத்திருப்பேன்
பெண்ணானவள் பூரணமடைந்ததை எண்ணி இனிவரும் கருமம் ஆற்றிநிர்பேன்
இத்தனை சுகங்களும் அடைந்துவிட ஒரு பெண்பிள்ளை போதுமென்று இத்தனை அழகாய் சொல்லிவிட்டேன்
இனி உம் விருப்பமென பேசிவிட உம்மிடம் வார்த்தையின்றிய நிலை உருவாக்கி நானோ என் பெண்பிள்ளைக்காய் பிரசவநாட்களை எண்ணிக்கழிக்கின்றேன்

Thursday, November 8, 2018

காதலின் வர்ணம் தான் என்ன?


காதலின் வர்ணம் தான் என்ன?
உள்ளத்தால் தூய்மையாக யாசிப்பதால் 
வெள்ளைநிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
கடலிலும் ஆழமாய் நேசிக்கின்றேன் 
என வாக்குறுதி அளிப்பதால் 
நீல நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
மனதார மங்களமாய் வாழ்க்கை ஆரம்பிக்க
இக்காதல் எனும் புரிதல் அவசியமென்பதால்
மஞ்சள் நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
செய்வதறியாது தன்நிலை தொலைத்தோர்
அபாயகரமானது என எச்சரிக்கை விடுக்க
சிவப்பு நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
பச்சிளம் காலத்திலும்
பருவமடையா வயதினிலும் தோன்றுவதால்
பச்சை நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
துக்கத்தின் அடையாளமாய் துயர் பகிர
மதுச்சாலைகளிலும் புகையிலை வாசனையோடும்
கறுப்பு நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
அட இந்தக்காலத்து காதலாவது கத்தரிக்காயாவது
என திட்டித்தீர்க்கும் பெரிசுகள்
ஊதா நிறம் கொடுத்திருப்பார்களோ?
காதலை உருவாக்கியவன் அதற்கு எந்த வர்ணம்
கொண்டு வானவில் வரைந்தானோ தெரியவில்லை
மாறாக தன்னைத் தொலைத்தவன்
கொடுத்த வர்ணம் தான் கண்ணீர்

Monday, November 5, 2018

ஏனோ என் வானிலையும் மாறிச்சென்றது


சற்று கூதலான காற்று தான் 
காதோரமாய் வளைந்து நெளிந்து 
நர்த்தனமாடிய கருங்கூந்தலை சற்று விலக்கிவிட்டு
ஏதோ சொல்லிச்சென்றது
விளக்கை சுமந்தபடி ஒளியால்
ஓவியம் வரையும் மின்மினிப்பூச்சியும்
ஒரு நிற ஒளியால்
ஏதோ சமிஞ்சை காட்டிச்சென்றது
பச்சை வயலோ இருளின் சூழ்ச்சியில்
கறுப்புக்கம்பளி போர்த்தி
என் மௌனத்தைக்கலைக்கும் வகையில்
ஏதோ ஒரு ஊந்துதல் தந்து சென்றது
மௌனக்கருவைக் கலைத்த நானோ
காதல் வலியால் துடிக்க
ஏனோ உன் பார்வையும் எனக்குப் பத்தியம் தந்தது
சொல்வதற்கு புதிதாய் ஏதுமில்லை
இதுவும் ஒரு இரயில் பயணம் தான்
அன்று மட்டும் புதிதாகியது
இதயவறை அருகே எனக்கொரு கருவறை கொண்டு
என்னவன் என்னைச் சுமந்து சென்ற நிமிடங்கள்
என் பயணத்தை சுவாரஸ்யமூட்ட பல குறும்புக்கதைகளைத்
திரட்டி வைத்திருந்தேன்
ஏனோ என் வார்த்தைகள் அனைத்தும் உன் பார்வைக்கு முன்னே நழுவிச் சென்றுவிட்டது
சற்று கதகதப்பு அதிகம் தான் இருந்தாலும் உன் வாடை பட்ட காற்றை நான் தவறவிடாமல் சுவாசத்தில் உள்வாங்கினேன்
உறக்கம் பெரிதாய் வரவில்லை இருந்தாலும்
என் தூக்கத்தில் உன் கவனிப்பு என்னவாக இருக்கும் என அறிய தூங்குவது போல் பாசங்கு செய்து பார்த்தேன்
ஏனோ உன் தீண்டல்களும் வருடல்களும் பிறர் கண் வைக்கும்படி பாசத்தைப் பறை சாற்றியது
மெதுவாகத் தட்டிக்கொடுக்கும் உன் விரல்கள்
என் தலை தடவ தவறியதில்லை
இருக்கமாய் என்னைப் பற்றிய உன் கரங்களோ
எச்சந்தர்ப்பத்திலும் என்னைத் தொலைத்ததில்லை
இதயத்துடிப்பிலும் எனக்கோர் தாலாட்டு இசை அரஞ்கேற்றி நின்றாய் நானும் ஏனோ ஒன்றும் அறிந்திராதவளாள்
உன் அரவணைப்பின் உச்சத்தில் என் நாடகத்தையும் அரஞ்கேற்றி முடித்தேன்
இம்முறை இரயிலின் ஒலி காதைப் பிளந்தது
சிணு சிணுவென கடுகாய் வெடுத்த என் பார்வைக்குப் பதில்
நாம் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது என்றாய்
சொல்லாத என் வார்த்தைகளோடு உன் பின்னால் வந்தேன்
நேரம் மட்டுமில்லை உன்னால்
ஏனோ என் வானிலையும் மாறிச்சென்றது

Tuesday, October 30, 2018

முள்வேலிக்குள் அகப்பட்ட இதயம் ஒன்றின் அழுகுரல்



இரு இதயங்கள் துடிக்கும் சத்தம் தான் கேட்கின்றது
ஒரு இதயம் தியாகம் செய்யும் தொனியுடனும் 
மறு இதயம் குற்றம் செய்த தொனியுடனும்
நடுவே ஒரு முள்வேலி
ஆம் முள்வேலிக்குள் அகப்பட்ட இதயம் ஒன்றின் அழுகுரல்
தான் இங்கு வரிகளாக காட்சிப்படுத்தப்படுகிறது
அழகான குக்கிராமம் அதிகாலைச் சூரியனும் கண் வைத்துவிடும்
மலர்களோ வாசனை வீசி மங்கையரைக் கவர்ந்திடும்
பச்சை வயலோ காற்றில் தலையசைத்திடும்
வண்ணச் சேலைகளோ காற்றில் உலர்ந்திடும்
பூஜைகள் சிறப்பாய் நடந்திடவே கோவில் மணி அடித்திடும்
மூன்று வேளைக்குமாய் அன்னம் அடுப்பில் அவிந்திடும்
வெட்டிப்பேச்சுக்காய் மாலை திண்ணை நிரம்பிடும்
இந்த இன்பம் போதுமென்றே சூரியனும் மறைந்திடும்
இதுதான் என் கிராமம்
நான் தான் தியாகம் செய்யும் இதயம் பேசுகின்றேன்
உடையவன் இன்றி மாற்றான் கைப்பற்றிய பின்
இறக்க இருக்கும் தறுவாயில் கடைசியாக பேசுகின்றேன்
மலர் சூடிய மங்கையரே உம் கணவரிக் இறுதிச்சடங்கை
நிறைவேற்றக்கூட வழியின்றி ஒரு மலராவது அவர் நினைவாய் வாடட்டும் எனக் கொய்கின்றீரோ
இங்கு மலர் முழுவதும் இரத்த வாடை வீசுகிறது
தப்பித்து ஓடிவிடும்
பச்சை வயலோ கருகி சாம்பலாகிவிட்டது இனி எங்கு
அறுவடை செய்ய ஊரார் உறவுடன் பந்தல் நாட்டுவது
வண்ணச் சேலைகள் இரண்டைப் பத்திரமாக எடுத்து வையுங்கள் நாடோடியாய் ஓடும் இடங்களில் தரையில் விரிப்பதற்கு ஒன்று
கிடைக்கும் மரக்கிளைகளில் குழந்தை உறங்க ஏணை கட்டுவதற்கு மற்றொன்று
கோவில் மணியை ஒருபடியாகக் கண்டு கொண்டேன்
ஆனால் கோவில்களும் விக்கிரங்களும் தான் காணாமற்ப் போய்விட்டன
ஒரு மூட்டை அரிசி ஒவ்வொருவர் கைகளிலும் இருக்கட்டும் ஒருவேளையவது உப்புக் கஞ்சி குடித்து உயிர் வாழ உதவிடும்
திண்ணைகளில் கால் வலிப்பதாய் அமர்ந்துவிடாதீர்கள்
உயிர்பறிக்கும் வெடிப்பொருட்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம்
இன்று எம் துயர் தாங்காத சூரியன் சோகமாய் மறைந்துவிட்டது
நானோ முள் வேலிக்கு உள்ளே என் உயிரைத் தியாகம் செய்து என் குடும்பத்தை ஏதோ ஓர் மூலையில் வாழ வழிவகுக்கின்றேன்
என்னைப் பெற்றவளோ பெற்ற கடனுக்கு செய்யாக்குற்றம் தன்னை தன்மேல் சுமத்தி கண்ணீரால் கெஞ்சிக்கொண்டு வேலியின் மறுபுறம் நிற்கின்றாள்

நான் என்பது சமூகத்தின் பிரதிபலிப்புக்களே




நான் சற்று கடினமானவள் தான்
என்னைச் சுற்றி போலியாய் சிரிக்கும் 
முகங்கள் பல கண்டும் புன்முறுவல் செய்யும்
முகத்துடன் கடந்து செல்கையில்
நான் சற்று திமிர் பிடித்தவள் தான்
சுயமரியாதையற்று சீவிக்கும்
சில சமூகங்களிடமிருந்து
சற்று விலகிச் செல்கையில்
நான் சற்று எளிமையானவள் தான்
ஆடம்பரத்தில் தான் அழகு இருப்பதாக
தங்களைத் தாங்களே ஏமாற்றும்
ஒரு கூட்டம் கண்டு உள்ளூரச்சிரிக்கையில்
நான் சற்று வேடிக்கையானவள் தான்
உண்மையை நான் அறிந்ததை அறிந்திராமல்
அதை மெருகூட்டுவதற்குப் பல பொய்களைச்
சொல்லி கதை ஆசிரியர் ஆவோர் பல மத்தியில்
நான் சற்று கோபக்காரி தான்
உண்மை நேர்மை சத்தியம் இதையணைத்தையும்
ஏளனமாய் ஓரம்கட்டி அதை ஏற்பதில்
என் மனம் சம்மதிக்காமல் வார்தைகளை கொட்டும் வேளையில்
நான் சற்று தனிமையானவள் தான்
அனைத்து உயிர்களும் அவர் அவர் கடமைகள் முடிந்தபின்
விலகிடும் தற்காலிகமான ஒரு பிணைப்புத் தான் இந்த
உறவுகள் என்று அறிந்த வேளையில்
நான் சற்று துணிந்தவள் தான்
ஆண் துணையற்ற பெண்ணின் வாழ்க்கை
சமூகத்தின் பார்வையில் இருந்து பாதுகாப்பாய்
விலகி நடக்க மனித ஓநாய்கள் பல தோன்றிய சந்தர்ப்பத்தில்
நான் சற்று விரக்தியானவள் தான்
இறப்பும் பிறப்பும் நிலையானது என்பது போல்
என் வாழ்வில் எதிலும் ஏமாற்றம் என அறிந்தும்
முயற்ச்சிகளைக் கைவிடாது விரைந்து செயற்படுகையில்
நான் சற்று அன்பானவள் தான்
ஒவ்வொரு உயிருக்கும் உண்டான மதிப்பை
அவர்களுக்காக பிறர் சிந்திடும் கண்ணீரின்
வலியை நன்கு அறிந்தமையினால்
நான் சற்று ஏமாளி தான்
அன்பெனும் போர்வை போர்த்திய விஷப்பாம்புகள்
எனத் தெரிந்திருந்தும் அன்பால் சாதித்துவிடலாம்
என இன்னும் நம்பிக்கை எனும் மாயையில் சஞ்சரிக்கையில்
இங்கு நான் என்பது சமூகத்தின் பிரதிபலிப்புக்களே
இதில் குறை தெரிந்தால் மாற்றவேண்டும் இந்த சமூகத்தையே

Sunday, October 28, 2018

யார் உனக்கு அதிகாரம் தந்தது?


என்னை வருடிச் செல்லும் மெல்லிய தென்றல் காற்றே!
அவன் நினைவுகளைத் தாங்கிடும் இந்த தேகத்தை
கூதல் செய்து செல்ல
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
என் நெற்றி வழி வழிந்தோடிய வியர்வைத் துளி
அவன் உதடுகளால் ஒற்றி எடுக்கும் நொடி
பூவாய் மலர்ந்திட அதை உதிர வைக்க
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
அவன் பார்வையில் உருகிவிடும் சந்தனத்தேகம்
அதைப் பொக்கிஷமாய் பாதுகாத்திடும்
பட்டுப் புடவை அதை மெதுவாய் நகர வைக்க
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
பாதத்திலாடிடும் வெள்ளிக் கொளுசுமணி
அவன் பார்வை என் திசை திரும்பும்படி
காற்றில் அவன் மேல் கொண்ட காதல் கீதம் இசைத்திட
அவன் இல்லா நேரத்தில் அதை இரசிப்பதற்கு
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
அந்திசாயும் வேளையில் நித்தமும்
ஏனோ ஏக்கமாய் அவன் வாங்கித்தந்த
வாசம் வீசும் கொடி மல்லிகை மாலை
அவன் மயங்கிக்கிடக்க ஆசையாய்
நான் சூட்டி அழகு பார்க்கையில்
அதன் வாசனை சற்று களவாடிச் செல்ல
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
இத்தனை இலட்சணமாய் அலங்கரித்து
பெண்ணாணவள் உனக்காய் உருகி உருகிக் காத்திருந்து
கண்ணீர் கன்னம் வழியே வழிந்தோடிட அதைத் துடைப்பதற்கு
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
உன் நினைவாலே வாடிய இந்த மலர்
உன் நிரந்தரப் பிரிவைத் துயர் தாங்காது
உயிர் நீக்க
அவ்வுயிரை காற்றோடு சங்கமிக்க
என் காதலனே உன்னைத் தவிர
இந்தக் காற்றுக்கு
யார் அதிகாரம் தந்தது?

Saturday, October 27, 2018

உன் செல்லமான சண்டைக்காரி


குழந்தைத்தனமான சிறு சண்டை
கொஞ்சும் மொழியில் பின் கெஞ்சல்கள்
வாட்டிவிடும் மௌனங்கள்
கர்வம் நிறைந்த காதல் பார்வைகள்
பேசிவிடத்துடிக்கும் இதயங்கள்
இடைவெளி குறையும் தூரங்கள்
வெட்கம் கொட்டும் பார்வைகள்
அதை இரசிக்கும் இரட்சகன் நீ
உன் அணைப்பில் மெய் மறந்த நான்
இந்த ஒரு நொடிக்காய் தான் என் இத்தனை நிமிட
வாக்கு வாதங்கள்
உன் செல்லமான சண்டைக்காரி நான்
அர்த்தமற்றதாய் அரும்பிடும் வாதங்களில்
உன்னை வெல்பவளாய் தினமும் புதிதாய்
சண்டைகள் பிடித்திடவே காத்திருப்பேன்
என்ன புதிதாய் பார்க்கிறாய்?
காதலில் இருக்கத்தானே வேண்டும்
சண்டைகளும் பின் தழுவல்கள் நிறைந்த சமாதானமும்
கட்டியணைத்து நீ பார்க்கும் பார்வையில் தெரியுமடா
ஓராயிரம் மன்னிப்புகள்
அதில் இலயித்துப்போகவே என் குறும்புத்தனமான சண்டைகள்
வேடிக்கையான இந்தத் தழுவலில் என்ன சுகம் இருக்கிறது
என விநோதமாய் பல முறை கேட்டிருப்பாய்
நீண்ட நேரம் திட்டித்தீர்த்த உதடுகள் களைத்திருக்கும்
நீண்ட நேரம் சொரிந்த கண்ணீரால் கண்கள் வற்றிப்போயிருக்கும்
காதலையும் உன்னையும் சுமக்கும் தேகமோ சோர்வடைந்திருக்கும்
கரங்களோ பற்றிக்கொள்ள ஒரு துணை தேடும்
அச்சந்தர்ப்பத்தில் நீ என்னைக் கட்டியணைக்கும்
ஒவ்வொரு நொடியும் இன்னும் கொஞ்ச நேரம் எனக்
கேட்கும் தேவாமிர்த நொடிகளே
காலங்களும் கடந்து போயின
நம் காதலும் திருமணபந்தத்தில் கனிந்தது
பொறுப்பான கணவனாக இன்று நீ
உன்னைச் சீண்டிப் பார்க்கும் அதே
செல்லமான சண்டைக்காரி நான்
இம்முறை என் சண்டைகள் அனைத்தும்
உன்மீது அக்கறை கொள்பவையே
வெகுநேரத்தின் பின்னான உறக்கம்
தட்டிக்களிக்கும் என்னுடனான நேரம்
கால்வாசி வயிறு நிரம்பிடா உணவு
உன்னை நீயே திட்டிக்கொள்ள தனிமை
எப்படி ஏற்றுக்கொள்ளும் என் மனம்?
அன்பே துணைவி எனும் மரியாதை ஊரார் அறிய
நீ எனக்குத் தந்த பொக்கிஷம்
அதைவிட என்றும் உன் காதலியாய் துணை நிற்கவே
விரும்புகிறேன்
பொறுப்புகளாளும் சொல்ல முடியா வேதனைகளாளும் என்னை ஓரம் கட்டி விடாதே
அதே காதலுடன் உன்னிடம் உன் காதல் நிரம்பிய தழுவலுக்காய் உன்னிடம் சண்டை போடக்காத்திருக்கின்றேன்
உன் செல்லமான சண்டைக்காரி

Wednesday, October 24, 2018

சிகரெட் காதலி


இரு விரல்கள் நடுவில் காதலோடு 
என்னைப் பற்றிக் கொண்டாய் 
எனக்கு கதகதப்பளிக்கவே 

காதல் தீயும் மூட்டினாய்
கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாம் உன் உதட்டு ரேகையை 

என்மேல் பதிய வைத்தாய்
யாருமற்ற சந்தர்ப்பங்கள் மட்டுமின்றி ஊரார் முன்னும் தைரியமாக அவ்வப்போது 
என்னை அறிமுகம் செய்து வைத்தாய்
எத்தனை பேர் கூறியும் மன்றாடியும் பற்றிய உன் கரம் நழுவவில்லை
இதை விட வேறு என்ன பாக்கியம் தான் இந்தக்காதலிக்கு கிடைத்து விடப்போகிறது?
இன்று உன்னை விட நான் உன்னைக் காதல் செய்கின்றேன்
என் காதல் பிணைப்பினால் நான் இல்லாத ஒரு வாழ்வை நீ கனவிலும் காணமாட்டாய்
இன்னும் அதீதமாக உன்னைக் காதல் செய்ய உன் உயிர் சுவாசம் எங்கும் ஊடுருவி முன்னேறிச் செல்கின்றேன்
உன் ஆன்மாவுடன் ஒன்றோடு ஒன்றாய்க் கலக்க உன் சுவாசப்பையை நெருங்கிவிட்டேன்
எனக்கு ஓர் ஆசை
உன் இதயத்தில் என்னைப் பற்றிய நினைவுகள் அனைத்தையும் ஒருமுறை முத்தமிட்டு கட்டியணைப்பதற்கு
வேகமாய் நிதானமற்று குருதியுடன் கலந்து உன் இதயவறைகளை எட்டிப் பார்க்கின்றேன்
நீ என்னை ஏமாற்றிவிட்டாய்
உன்னை மட்டுமே மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்ட என்னை விட கசப்பான பழைய நினைவுகள் உன் இதயத்தில் சுட்டெரித்துக்கொண்டு இருப்பதைக் கண்ட என் மனம்
எவ்வளவு துடித்திருக்கும் என்பதை அறிந்திராமல் நீயோ
பழைய நினைவுகளிடம் இருந்து தப்பிக் உன்னை நீயே என்மேல் காதல் என்று ஒரு வடிவம் கொடுத்து ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றாய்.
உன்னை நேசித்த இதயமல்லவா எப்படி உன்னை நீங்கிச் செல்வேன்? 

ஏமாற்றப்பட்டதை அறிந்தும் 
உன் விரல்கள் நடுவில் வாழும் 
சிகரெட் காதலி

Tuesday, October 23, 2018

அவள் தான் என் அம்மா


ஆங்கிலம் பெரிதாய் தெரிந்திராதவள்
என் ஆசைக்காய் முயற்சித்து உச்சரித்து விடுவாள்
என் விருப்பங்கள் பெரிதாய் அறிந்திராதவள்
விரும்பியதை வாங்கித் தந்து என்னை சமாதானம் செய்திடுவாள்
தன்விருப்பத்தில் தெரிவுகளை மேற்கொள்ளாதவள்
என் விருப்பத்தை எப்பொழுதும் ஏற்றிடுவாள்
தன் பசி அறியாது அடுப்படியில்
என் பசி போக்க காய்ந்திடுவாள்
வண்ணங்களில் சேலை அணிந்திடாதவள்
வண்ணமயமாய் என் வாழ்வை மாற்றிட போராடிடுவாள்
துன்பங்கள் பல சகித்துக்கொண்டவள்
என் முகம் துவண்டதைக்கண்டு
கண்ணில் உதிரம் வடிப்பாள்
கணவன் அவன் உயிர்துறக்கையில் கைம்பெண்ணாய்
தந்தையுமாகி நின்றவள் அவள்
பெற்றகடனுக்கு நான் பெரிதாய் உனக்கு
ஏதும் செய்யவில்லை எனினும்
மற்றோர் முன் என்றும் உயர்வாய்க்கூறிடுவாள்
தூய்மை அது வெண்மை மட்டுமில்லை
அதை நான் அச்சொட்டாய்க் கண்டதில்லை
கருமை நிறத் தேகத்திலும் தூயவள்
அவள் தான் என் அம்மா

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...