Tuesday, December 18, 2018

ராதாகிருஸ்ணன்



எப்பொழுதுதான் இவன் குழல் ஊதுவதை நிறுத்தப்போகின்றானோ தெரியவில்லை
எப்பொழுதுதான் அவள் சுயநிலை பெற்று கண்விழித்துப்பார்ப்பாளோ தெரியவில்லை

அகிலமே வியந்து ஆராதனை செய்திடும் தெய்வீகக் காதல்கதை 

இவனோ காதல் தாகம் தீர்க்க குழல் ஊதுகின்றான்

அவளோ காதல் தாகம் தீராதவளாய் மயங்கிக்கிடக்கின்றாள்
என்ன மாயம் தான் செய்தாயோ மாயக்கண்ணா
காற்று எங்கும் உந்தன் காதல் வாசம்
அதை சுவாசித்து உயிர்வாழ்கிறாள் இந்த ராதையின் நேசம்
கவர்ந்து கொள்ளும் நீலமயில் தோகைவிரித்து தன் அழகைக் காட்டிட வானமோ மெல்லிய நீலநிறம் ஆங்காங்கே தூவிட அதன் விம்பமோ தெளிந்த நீரில் தன் அழகைப் படம் போட்டுக்காட்டிட நீலக்கண்ணன் வதனமோ இவையனைத்தையும் மிஞ்சிட அதைப்பாராத ராதையோ குழல் ஓசையில் மட்டும் மூழ்கித்திழைக்கின்றாள்
மூச்சைப்பிடித்து நீண்ட நேரமாய் எந்த ராகம் கொண்டு மீட்டுகின்றானோ அதை
மூச்சையுற்று நிதானம் தவறவிடாமல் தோல்சாய்ந்தபடி காதல் செய்கிறாள் இந்த ராதை
சாதாரண மூங்கில் குழலில் அவன் உதடுபதித்து ஆழமான காதலுடன் உயிர்மூச்சை
துவாரத்தின் வழியே செலுத்தி விரல்களால் யாலம் செய்கின்றான்
யாரும் செய்யாத விந்தையாய் ஆச்சரியத்தில் உறைந்துபோய்விட்டாள்
குழல் ஊதுவதைமட்டும் நிறுத்திவிடாதே
அவள் வேறு உலகத்தில் பரமாத்மா கண்ணனின்
இசையோடு மட்டும் உயிராத்மாவாய் அஞ்சாதவாசம் செய்கின்றாள்

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...