Thursday, November 8, 2018

காதலின் வர்ணம் தான் என்ன?


காதலின் வர்ணம் தான் என்ன?
உள்ளத்தால் தூய்மையாக யாசிப்பதால் 
வெள்ளைநிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
கடலிலும் ஆழமாய் நேசிக்கின்றேன் 
என வாக்குறுதி அளிப்பதால் 
நீல நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
மனதார மங்களமாய் வாழ்க்கை ஆரம்பிக்க
இக்காதல் எனும் புரிதல் அவசியமென்பதால்
மஞ்சள் நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
செய்வதறியாது தன்நிலை தொலைத்தோர்
அபாயகரமானது என எச்சரிக்கை விடுக்க
சிவப்பு நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
பச்சிளம் காலத்திலும்
பருவமடையா வயதினிலும் தோன்றுவதால்
பச்சை நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
துக்கத்தின் அடையாளமாய் துயர் பகிர
மதுச்சாலைகளிலும் புகையிலை வாசனையோடும்
கறுப்பு நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
அட இந்தக்காலத்து காதலாவது கத்தரிக்காயாவது
என திட்டித்தீர்க்கும் பெரிசுகள்
ஊதா நிறம் கொடுத்திருப்பார்களோ?
காதலை உருவாக்கியவன் அதற்கு எந்த வர்ணம்
கொண்டு வானவில் வரைந்தானோ தெரியவில்லை
மாறாக தன்னைத் தொலைத்தவன்
கொடுத்த வர்ணம் தான் கண்ணீர்

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...