Saturday, June 6, 2020

தோழா சற்றுத் தோள்கொடு


















உயிர்நண்பா

மாற்றான் தாய் வயிற்று சகோதரா

ஆண் உலகின் அன்புயிரே

எனக்கு உதவி செய்


இருட்டைக் கண்டு எனக்குப் பயமில்லை 

ஆனால் 

மனித வேட்டைக்காக பின்தொடரும் 

மனிதமிருகங்களின் கால் தடத்திற்கு அஞ்சுகிறேன்


நீண்ட தூரம் தனிமையில் பயணிப்பதில் 

அலுத்துக்கொள்ளவில்லை

ஆனால்

வேண்டா உரசுதலில் தேகத்தில் வெறுப்பை 

வளப்போரும் வார்த்தைகளால் வஞ்சனை செய்வோரும் 

அருகில் அமர்வதை எண்ணி அஞ்சுகிறேன்


பொறுப்புக்களை சுமப்பதில் சளைக்கவில்லை 

ஆனால்

கடமைக்குச் செல்லுமிடத்தில் கயவர்கள் 

சூழ்ந்திருப்பதை எண்ணி அஞ்சுகிறேன்


காதலில் கண்கவரப்பட்டு களத்திலிறங்க தயக்கமில்லை 

ஆனால்

காதல் என்ற வார்த்தை மட்டும் கூறி

காமுகரின் மூர்க்கச்செயலுக்கு

மனதில் இடம்கொடுக்க அஞ்சுகிறேன்


ஆண்களால் அழிவேற்படும் காலத்திலும்

கண்ணியமாய் கடந்து செல்லும்

நல்வர்க்க தலைவன் 

வழி கடைப்பிடிக்கும் ஆடவன் 

கண்ணில் உருத்தலின்றி

வாழும் யோகியன் நீ பார்த்தா

கலக்கமுற்றவேளைகளில் எல்லாம்


உயிர்நண்பா

மாற்றான் தாய் வயிற்று சகோதரா

ஆண் உலகின் அன்புயிரே

எனக்கு உதவி செய்



No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...