Wednesday, June 24, 2020

மறக்கமுடியுமா










மறக்கமுடியுமா

உன்னோடு பள்ளிப்பருவம் 

தொட்டு இன்று வரையிலான நினைவுச் சிற்பங்கள் 

ஒவ்வொன்றையும் அவை ஒவ்வொன்றாய் 

இதயத்தில் ஆழமாய் நான் பதித்த கல்வெட்டுக்கள்


இணையங்களில் இல்லை இதயங்களில் 

ஆரம்பித்த எம் அன்புப் பரிமாற்றங்கள் இடையிடையே 

ஆயிரம் பெரும் சண்டைகள்

ஒவ்வோர் சண்டை முடிவினிலும் 

புன்னகைத்தே உன்னிடம் வருவேன் 

நீண்ட மண்றாடலின் 

பின் மன்னிக்க வேண்டுவேன் 

பதிலாய் நீயும் கேலி செய்வாய்

கேலிகளே இன்று கேள்விகளாகின

ஒவ்வொரு பிரிவிலும் என் தேடல் இருக்கும்

தேடலின் பலனாய் நீ கிடைப்பாய்

ஊடலிலும் தேடலிலும் மாதங்களும் ஓட வருடமும் புரண்டோடியது


நீயும் வாலிபனானாய் நானும் இளவஞ்சியானேன்

இருந்தும் இந்த வாக்குவாதங்கள் நீண்டே தான் சென்றன 

இந்த வாய்ப்பேச்சுக்கள் இல்லாத நிலை 

வருமெனத் தெரிந்திருந்தால் நான் வாய்திறக்காமலே 

காலத்தை கடத்தியிருப்பேன்

அன்பான அக்கறைகளில் அடுக்களை சமையும்

என் உரையாடலோடே நடந்தது

எந்தன் பரிசு பொம்மைகள் உந்தன் கண்ணாடிப் 

பெட்டிகுள் காட்சியளித்தது

உனக்காய் வாங்கிய சட்டை கூட

உன் தம்பிக்கோ அளவானது


பக்குவமான வயதில்லை

பக்குவம் சொல்லித்தர யாருமில்லை

மண்ணோடு புரண்டழுது கண்ணீர் வடித்தாலும்

வானத்து விண்மீன்கள் கையில்

தவழ்வது இல்லை

நீயோ கடல்கடந்து போனாய்

நானோ எனை மறந்துபோனேன்

காலங்களும் கடந்தன

கடதாசி கணினி மயமாய் உருவெடுத்தன

மீண்டும் அழைப்பு விடுத்தேன்

மறுபக்கத்தில் பதிலளிக்க நீ


மீண்டும் நட்புக்கு பாலமிட்டேன்

நீயோ வேடம் என்றாய்

போகமனமில்லை என்றேன்

போடி என் வாழ்விலிருந்து என துரத்திவிட்டாய்

காரணம் என்னவோ நீயும் சொல்லவில்லை 

நானும் கேட்கவில்லை

கேட்பதிலும் பலனில்லை என்கே அறிந்தேன்


என்னதான் காரணமோ எதற்காய் இந்த காரியமோ

கானகமும் சொல்லும் என் சோகக்கதை

சோ எனப் பொழிந்த மழை

என் கண்ணீரைக் கழுவிக் கழுவி உப்பாய்போனது

உன் நிஜாபகங்கள் மட்டும் கரைந்திடாத

சிலைமேல் எழுத்தாகின


தொல்லைகளினால் தொலையட்டும்

இந்த அன்பின் இராச்சியம்

காலங்களின் கட்டளைகளை நிறைவேற்றியே

காத்திருக்கும் காத்திருப்புகள் 

பிரயோசமற்றதாய் களவாடிப்போன

இதயத்தில் உனக்கான நியாபகங்கள்

மட்டும் பகிரங்கமாக பதுக்கிவைக்கப்பட்டுள்ளன


ஆண்பெண் நட்பின் அளவும் அளவுகோலும்

நீ அறிந்துவிட்டாய் இன்னும் நான் அறியாமல்

இருப்பின் அது என்தவறே 

முட்டுக்கட்டைகளால் என்னுடன் முரண்பாடிடாதே

ஒதுங்கி ஓரமாய் இன்னும் மறவாமல் தவிக்கின்றேன்




No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...