Sunday, April 19, 2020

செல்ஃபி ஒரு பார்வை



கையடக்கத்தொலைபேசி அனைவரது
கைகளிலும் புறழ இதுவும் ஒரு காரணம் தான்
தொலைபேசி வகைகளும் தரங்களும் கைமாற்றிட்டு பரீட்சித்துப் பார்க்க இதுவும் ஒரு ஆவல்தான்
வறண்ட சருமமும் வனப்புமிக்க வர்ணஜாலமாய்
வர்ணமற்ற ஓவியங்களும் 
ரவிவர்மனின் கைக் காவியமாகிட  
உதட்டோரப்புன்னையும் இன்று 
போலி  வளைவாகிட 
கஸ்தூரிமஞ்சள் நிறம் 
நினைத்தாற்போல் ஏறி இறங்கிட 
கிழப்பருவமும் குமரிக்கோலம்பூண்டிட
நவீன புழக்கமாகியது செல்ஃபி தான்
பிறப்புமுதல் இறப்பு வரை வேகமாய் பயணிக்கிறது
பிறந்த குழந்தைக்கு சிரிக்கக்கற்றுக்கொடுப்பதும்
இறந்த உடலிற்கு ஆத்ம அஞ்சலி செலுத்துவதும்
சந்தேகம் கொள்ளும் காதலிற்கு பாதகமாகுவதும்
மோகம் கொள்ள சாதகமாய் அமைவதும் 
புற அழகில் சந்தேகம் கொள்ளும் வேளை எல்லாம் 
சமாதானம் செய்வதும் 
மகிழ்ச்சியாய் வாழ்கின்றோம் என போலி வேடம் போடுவதும்
போகும் பாதையெல்லாம் ஒரு கால் தடமாய் அமைவதும் இந்த செல்ஃபி தான்
வாழ்கையின் நினைவுகளை அங்கமாய் பதியவைக்க 
ஆண்டாண்டு காலம் போகினும் அடுத்தவரிடம் 
அந்நிகழ்வை பறைசாற்றிட கையிலிருக்கும் ஆதாரமும் அது தான்
தான தர்மமும் வாரிவழங்கும் வள்ளலும்
புராணக்கதை தாண்டி முகங்காட்டும் தளம் இது
இழிந்தோர் முகஞ்சுழிக்கும் தருணமும் இது
மாமாமகளின் ஆசைக்கனவுகள் அடுத்த தேசம் தாண்டி நிஜங்களாய்ப் பலிக்கும் மந்திரவித்தை இது
விஞ்ஞானிகள் ஞானிகள் கண்டு வியக்காத விந்தை இது
அதீத மோகத்தில் உயிர்ப்பலிகள் பல வாங்கிய
இரத்தக்காட்டேரியும் இது 
பெண்ணின் மானத்தை கொள்ளை கொள்ளும் காமுகனும் இது
நிகழ்வுகளில்  காணொளி பிடிப்பாளரை மிதமிஞ்சிய 
விஸ்பரூபம் இது சிலசமயம் வெறிகொள்ள வைக்கும்
போதையும் இது
கொரனோவைவிட மிகவேகமாய் பரவிவரும் மிகக் கொடிய விசக்கிருமி தான் இந்த செல்ஃபி

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...