Thursday, March 12, 2020

கடந்து போகட்டும்



அவர்கள் என்னை மட்டுமல்ல
என் தனிமையையும் கடந்து
போனார்கள். இறுக்கமான என்
இதயத்திலும் அவர்களுக்கு என்று 
ஓர் இடம் ஒதுக்குவேன் என கனவிலும் 
நான் நினைத்துப் பார்த்ததில்லை.
தனிநபருக்கான சூழலை தகர்த்தெரிந்து
மனிதவாடை வீச நான் மாற்றிக்கொண்டேன்
வண்ணமயமான விழாக்கோலங்களில்
ஒரு உறவாய் நானும் பங்கெடுத்துக்கொண்டேன்.
உப்பிட்டவரை உயிராய் நினைத்தேன்.
மூலை முடுக்கிலும் என் பாதச்சைவடு பதிந்திருக்கும்
அதை நானே தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தேன்.
பாத்திரங்களில் என் கைரேகை பதிந்திருக்கும்
அதை நானே சுத்தம் செய்தேன்.
அடுப்படி ஆகாயத்தில் மேகம் தான் நான். மாசு தூசுகளை உள் வாங்கி கனப்பினும் மாரியாய் நன்மை செய்வதுபோல் என்னை எண்ணிக்கொள்வேன். சிறிதுகாலத்திலே அன்பை 
சம்பாதித்துவிடுவேன் விடவேண்டும் என்ற எண்ணம்
அடி சறுக்கிவிழ மீண்டும் துணியும் தீரச் செயலை
உடலும் மனதும் ஏற்றுக்கொண்டது.
பணவரவுகள் என் கைகளில் புலங்கியதும் உண்டு 
ஆனால் கறைகளை என் கைகளில் படிய நான்
விரும்பியதில்லை. 
பத்திரமாய் அடைகாத்துக் கொடுப்பேன் ஏனெனில் நான் தேடியது அதுவல்ல அன்பு.
ஆகாரம் பரிமாறுவதுல் அலாதிப் பிரியம் கடைசிப்பருக்கைவரை ருசிப்பவருக்கு அருகில்
நளபாகம் செய்துள்ளேன்.
வெளுப்பு வெள்ளாவி வேலைகளும் நன்கு தெரியும்.
ஆசான் கலையும் அறிவும் வளர்திடும் வழங்கியும் ஆனேன். 
நானும் தானமாய் ஏதும் செய்யவில்லை அனைத்திற்கும் மௌனமாய் விலைபேசினேன் அன்பு. பணம் பொருள் தங்கத்திற்கு என்னை விலை பேசி இருக்கலாம் போலும் அன்பை மட்டும் என்னிடம் தீர்க்கப்படாத கணக்காக்கினார்கள். அவர்களுக்காய் விரிவடைந்த என் உலகம் மீண்டும்
சுருங்கவில்லை மாறாக தனிமை ஆட்கொண்டது.
தனிமை அவர்களைப் போல் அல்ல. என்னுடன் அன்பாய் நடந்துகொண்டது. என் பல கேள்விகளுக்கு என்னிடமே பதில்களைத் தேடித் தந்தது. அழுகையும் சிறந்த மருந்துதான் எனக் காட்டித்தந்தது. தனிமையே எனக்கு உணவுகளைப் பரிமாறியது. அதில் சுவை இருப்பினும் எனக்கு உணர்த்தவில்லை. அவர்களின் நோக்கம் சிந்தனை செயல் எல்லாம் எனக்குப் புரியவைத்தது. நான் தான் முட்டாள் இருப்பினும் என்னை தனிமை விடவில்லை.
என்னை மீண்டும் எழச் செய்தது இம்முறை அவர்களுக்காக அல்ல முற்றிலுமான தனிமைக்கு.


No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...