உயிர்ப்பிணைப்பில் இன்று ஒரு முடிச்சு
Love, War, Nation, Sad, Life, Mother, Nature, Childhood, Society, Feminism, Father, Relationship, Friendship, Women, Beauty, Tamil, poem , emotion
Monday, July 27, 2020
புற்றுநோயாளியின் கர்ப்பம்
உயிர்ப்பிணைப்பில் இன்று ஒரு முடிச்சு
Monday, July 20, 2020
நான் மீண்டும் அறிமுகமாகின்றேன்
நான் மீண்டும் புதிதாக
உனக்கு அறிமுகமாகின்றேன்
என் முழுப்பெயர் முதல்
செல்லப்பெயர் வரை அறிய
நீ மீண்டும் முயன்றுகொள்
உனக்கு ஆவலான அலாதிப்பிரியமான
விடையங்களை அறிய மீண்டும்
வினாக்களைத் தொடுக்கின்றேன்
நீண்ட உரையாடல்கள் நீளமான இரவுகள்
பகட்டான பகல் மாலை வேளையும் தாண்டி
புதிய ஒரு தினத்தை மீண்டும் அமைக்கட்டும்
மணித்துளிகளுடன் உன் நினைவுத்துளிகளும்
ஒட்டிக்கொண்டு நிமிடமுள் ஸ்தம்பித்துப்போகட்டும்
கைவண்ணங்கள் பல உன்வண்ணம்
காண்பித்தலில் வெகுமதி பெற்ற இறுமாப்பு
இதயத்தில் மீண்டும் துடிக்கட்டும்
புரிந்துணர்வற்ற புரிதல்கள் மூண்டுபோன
கசப்பு வார்த்தைகள் பரிசுத்தமான அன்பை
மீண்டும் பரிசீலிப்பதை தவிர்த்துக்கொள்ளட்டும்
நான் என்னையும் நீ உன்னையும் நேசிக்கச்செய்யும்
பரிபாசை யுக்திகள் நிலைக்கண்ணாடி விம்பத்தில்
மீண்டும் இரசிக்கும் இரசணையூட்டட்டும்
நீ நீவீராய் செல்ல நான் நலிவுற்றுப்போக
சங்கடமான சந்தேகத்தேக்கத்தில் நறுமலரும் பூக்க மீண்டும் கடிகார முட்கள் சுழறட்டும்
பழைய புத்தகத்தில் புதிய அத்தியாயம்
சுவாரஸ்யமான
பகுதிகளை மென்மையான
தோகை கொண்டு புனரமைக்கட்டும்
மீண்டும் மீண்டும் அறிமுகமாகும்
புதியவர்கள் போல்
தேடலும் போலி ஊடலும்
ஊக்கமளிக்கும் உறவுவிற்காய்
நான் மீண்டும் அறிமுகமாகின்றேன்
Saturday, July 4, 2020
என்னை அழவைத்தவர்களுக்கு நன்றி
என்னை அழவைத்தவர்களுக்கெல்லாம் மனமார நன்றி சொல்கின்றேன் இந்த வேளையில்
இந்தக் கல்லிலும் ஈரம் இருப்பதாய் உணர்த்துவதற்கு
அன்பை தற்காலிகமாய் அடகு வைத்தீர்கள்
கண்ணில் ஈரம் வருவதற்காய் சொல்லால் எத்தனை
ஈட்டி அம்புகளை என் மனதில் பிரயோகித்திருப்பீர்கள்
நம்பிக்கையை விதைப்பதற்கு எத்தனை நாட்கள்
கண்ணயறாமல் நிஜமுகங்களை வேளாண்மை
செய்யாமல் காத்திருந்திருப்பீர்கள்
பொய்யான வார்த்தைகளை நிஜமென உணர்த்த
எத்தனை அரும்பாடுபட்டு புன்னகையை
கண்களில் காண்பித்திருப்பீர்கள்
நிழலாய் பின்தொடர்ந்து உயிராய் காப்பதாய்
பொய் வாக்கினை அளிக்க மனதை எப்படி
திடப்படுத்தியிருப்பீர்கள்
கண்கலங்கிய நொடியெல்லாம் கரம்பற்றி
பாசப்பிணைப்பை வலுப்படுத்த வலியவந்து
உறவாடும் நளினங்களை எப்படி கையாண்டிருப்பீர்கள்
இத்தனையும் ஒருநாள் உதறலுக்காய் உங்களை
மாற்றிக்கொண்டீர்களே என் கண்ணீரில்
இனி இவை இடம் பெறாத நன்றி மட்டுமே உங்களுக்கு
Friday, June 26, 2020
சிரிப்பு போலி பிரதிபலிப்பு
என்றும் இனிமையான சிரிப்பொலியும்
செஞ்சந்தன முகப்பொலிவும்
மனதை வசப்படுத்தும் இன்மொழியும்
நேர்த்தியான இஸ்திரிக்கப்பட்ட உடையும்
பொய் கூறிவிடலாம்
மகவற்ற தாய் மடிக்கு நற்புதல்வனாய்
ஆடவண் துணையற்ற பெண்ணின் தமையனாய்
ஈன்றவனற்ற பிஞ்சு மழலையின் தகப்பனாய்
சகமும் பகிரும் தோழனாய்
உறவுமுறியடித்து விடலாம்
செஞ்சோலையும் சாலையோர நிழலும்
கொட்டும் அருவி மழைச்சாரலும்
வயலும் புல்வெளிநிலமும்
மலைத்தொடர் கடற்பரப்பு மணல் மண்ணும்
கண்ணிற்கு காட்சியற்றும் போகலாம்
முதல் விசும்பின் மழைத்துளியும்
அதில் எழுnம் மண்வாசமும்
பால்வாடை வீசும் மழலை அமுதும்
வெண்புகை பனித்துளி படர்ந்த மலர் மொட்டுக்களும்
தேன் வண்டின் ரீங்காரத்தில் ஓடி விளையாடும்
அணிலும் சிறு பட்சிகளும் இதமற்றுப் போகலாம்
அயலவர்களின் சலசலப்பான பேச்சுகளும்
பத்திரிகை நடுப்பக்கத்து கிசுகிசுப்பான பேச்சுகளும்
நவீன நங்கையின் நளினமான பேச்சிலும்
காரியவாதியின் கபடமான பேச்சிலும்
கடமையதிகாரியின் கடுமையான பேச்சிலும்
இனி சுவாரஸ்யம் குறைந்துவிடலாம்
அருளாசிபுரியும் இறைவனடி துணைநிற்காதென
அகவிழி சுடர் அணைந்து இருட்டான ஓர்
ஓசையறியா அறையில் மேல் முகட்டில் கற்பனைத் திரையை
அங்குமிங்குமாய் அலைய விடலாம்
காலன் பிடியில் கைவிலங்கின்றி இனி
எவர் சித்தம் என்றே இங்ஙனம் இனிதாய் நிறைவேற்றிய
மேடை நாடகத்தில் தன் கதாப்பாத்திரத்தை
விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றம் செய்யலாம்
நிர்க்கதியற்ற நிம்மதி தொலைத்தவனிற்கு
அன்பாய் அருகில் அணைத்து அமர்ந்து
தலைகோதி மடிமீது
ஒரு நிமிட பாசப்பிணைப்பிற்கு
மனம் தேடும் அன்பானவர் இல்லாவிட்டால்
அவன் சிரிப்பு போலி பிரதிபலிப்பாய் அமைந்துவிடலாம்
Wednesday, June 24, 2020
மறக்கமுடியுமா
மறக்கமுடியுமா
உன்னோடு பள்ளிப்பருவம்
தொட்டு இன்று வரையிலான நினைவுச் சிற்பங்கள்
ஒவ்வொன்றையும் அவை ஒவ்வொன்றாய்
இதயத்தில் ஆழமாய் நான் பதித்த கல்வெட்டுக்கள்
இணையங்களில் இல்லை இதயங்களில்
ஆரம்பித்த எம் அன்புப் பரிமாற்றங்கள் இடையிடையே
ஆயிரம் பெரும் சண்டைகள்
ஒவ்வோர் சண்டை முடிவினிலும்
புன்னகைத்தே உன்னிடம் வருவேன்
நீண்ட மண்றாடலின்
பின் மன்னிக்க வேண்டுவேன்
பதிலாய் நீயும் கேலி செய்வாய்
கேலிகளே இன்று கேள்விகளாகின
ஒவ்வொரு பிரிவிலும் என் தேடல் இருக்கும்
தேடலின் பலனாய் நீ கிடைப்பாய்
ஊடலிலும் தேடலிலும் மாதங்களும் ஓட வருடமும் புரண்டோடியது
நீயும் வாலிபனானாய் நானும் இளவஞ்சியானேன்
இருந்தும் இந்த வாக்குவாதங்கள் நீண்டே தான் சென்றன
இந்த வாய்ப்பேச்சுக்கள் இல்லாத நிலை
வருமெனத் தெரிந்திருந்தால் நான் வாய்திறக்காமலே
காலத்தை கடத்தியிருப்பேன்
அன்பான அக்கறைகளில் அடுக்களை சமையும்
என் உரையாடலோடே நடந்தது
எந்தன் பரிசு பொம்மைகள் உந்தன் கண்ணாடிப்
பெட்டிகுள் காட்சியளித்தது
உனக்காய் வாங்கிய சட்டை கூட
உன் தம்பிக்கோ அளவானது
பக்குவமான வயதில்லை
பக்குவம் சொல்லித்தர யாருமில்லை
மண்ணோடு புரண்டழுது கண்ணீர் வடித்தாலும்
வானத்து விண்மீன்கள் கையில்
தவழ்வது இல்லை
நீயோ கடல்கடந்து போனாய்
நானோ எனை மறந்துபோனேன்
காலங்களும் கடந்தன
கடதாசி கணினி மயமாய் உருவெடுத்தன
மீண்டும் அழைப்பு விடுத்தேன்
மறுபக்கத்தில் பதிலளிக்க நீ
மீண்டும் நட்புக்கு பாலமிட்டேன்
நீயோ வேடம் என்றாய்
போகமனமில்லை என்றேன்
போடி என் வாழ்விலிருந்து என துரத்திவிட்டாய்
காரணம் என்னவோ நீயும் சொல்லவில்லை
நானும் கேட்கவில்லை
கேட்பதிலும் பலனில்லை என்கே அறிந்தேன்
என்னதான் காரணமோ எதற்காய் இந்த காரியமோ
கானகமும் சொல்லும் என் சோகக்கதை
சோ எனப் பொழிந்த மழை
என் கண்ணீரைக் கழுவிக் கழுவி உப்பாய்போனது
உன் நிஜாபகங்கள் மட்டும் கரைந்திடாத
சிலைமேல் எழுத்தாகின
தொல்லைகளினால் தொலையட்டும்
இந்த அன்பின் இராச்சியம்
காலங்களின் கட்டளைகளை நிறைவேற்றியே
காத்திருக்கும் காத்திருப்புகள்
பிரயோசமற்றதாய் களவாடிப்போன
இதயத்தில் உனக்கான நியாபகங்கள்
மட்டும் பகிரங்கமாக பதுக்கிவைக்கப்பட்டுள்ளன
ஆண்பெண் நட்பின் அளவும் அளவுகோலும்
நீ அறிந்துவிட்டாய் இன்னும் நான் அறியாமல்
இருப்பின் அது என்தவறே
முட்டுக்கட்டைகளால் என்னுடன் முரண்பாடிடாதே
ஒதுங்கி ஓரமாய் இன்னும் மறவாமல் தவிக்கின்றேன்
Friday, June 12, 2020
நார்த்திகவாதி யார்?
ஆர்த்திகன் என தன்னைத் தானே தம்பட்டம்
அடித்துக்கொள்பவனை எதேற்ச்சையாய்
கண்டேன் அவனோ என்னை
நார்த்திகன் என ஏளனமாய்ப் பார்த்தான்
எள்ளளவேனும் இடைவெளி நிரப்ப கிள்ளும்
வார்த்தைகளால் வினவ நினைத்தவன்
போலிப் புன்முறுவலுடன் சகா என்றான்
உங்கள் வயலில் விளைச்சல் எப்படி
எல்லாம் இறைவன் சித்தம் என்றான்
பாடுபட்டு வியர்வை சிந்தியவன் விவசாயி
அவன் நலனை வேண்டுங்கள் என்றேன்
மழையும் வெயிலும் இறைவனின் படைப்பு
ஏன் வார்த்தைகளில் நையப்புடைப்பு என்றான்
பனை மூழ்கும் வெள்ளத்தையும் விறகெரியும்
கொழுந்தணல் வெயிலையும் அதே இறைவன் தானே
படைத்திருக்கவேண்டும் என்றேன் நான்
வாணிவிழாவில் சிறப்புறையாற்ற
வரவேற்கிறேன் என்றான்
எதற்காக வாணிவிழா அதன் முக்கியத்துவம்
தான் என்ன என்றேன்
கல்வியின் அதிபதி சரஸ்வதிதேவி உள்ளம் மகிழ்ந்தால்
மாணவர் கல்வி சிறக்கும் என்றான்
காதுச்சவ்வு கிழிய காணொளிப் பாடலை காலை மாலை
இடைவெளியற்று உரக்க ஒலிபெருக்கினால்
சாந்த சொரூபிணி சரஸ்வதியே ஓடிவிடுவாள் என்றேன்
மாரிமுத்துவின் மகள் அம்மைபோட்டு படுத்திருக்காள்
அந்தப்பக்கம் போய்விடாதே என்றான்
அம்மனை தரிசிக்கத்தானே ஆலயத்தோறும் ஆராதனை செய்வீர்கள்
அம்மனே நேரில் வந்தால் ஏன் ஓடுகிறீர்கள் என்றேன்
அம்மனின் குறைபாடு அம்மன் கோபிக்கும்
தொற்றிவிடும் சரியான உபத்திரம் என்றான்
நீதான் பல தொண்டுகள் செய்கிறாயே
எப்படி அம்மனுக்கு குறைவரும்
அம்மை எப்படி உனக்கு வரும் என்றேன்
கோவில் சந்நிதானம் நேரே கால் நீட்டாதே என்றான்
காலில் இரத்த ஓட்டம் சிறிது சரிவரும்வரை பொறு என்றேன்
கூடாது கூடாது
சுவாமி கோபிக்கும் என்றான்
சந்நிதானத்திலும் கற்பகிரகத்திலும் மட்டும் தான்
கடவுள் இருக்கிறாரா
சர்வவியாபகம் என்று சமயப்புத்தகத்தில் படித்தது
பொய்யா என்று கேட்டேன்
பால்குடம் பவனிவர பாலமுருகன் கோயில் திருப்பணியில்
கலந்துகொள்ள வருவாயா என்றான்
பசியில் வாடும் தாயற்ற பிஞ்சுக்கும்
பட்டினியில் வறுமை வாட்ட கஞ்சி குடிக்கும் ஏழைக்கும்
இந்தப்பால் கிடைத்திருந்தால் ஏன் கள்ளிப்பாலை
வலுக்கட்டாயமாய் பருக்கப்போகிறான் என்றேன்
எல்லாம் தங்கத்தால் வெய்யப்பட்ட கூரையில்
குடிகொண்ட சந்நிதியான் பார்த்துக்கொள்வான் என்றான்
அந்த தங்கக்கூரையை விற்றாலே வேறு நாட்டில்
கையேந்தும் நிலை
நம் நாட்டுக்கே தேவையில்லையே என்றேன்
போடா போ நீ இன்னும் மாறவில்லை என்றான் சலிப்போடு
உங்கள் இதயங்களிலும் எண்ணங்களிலும் மாற்றம் காணும் வரை
பரம்பரை அலகில் இதுவும் ஒட்டிக்கொள்ளும் கசடாக
அதை என்னைப்போல் ஒருவன் முளைத்துக்கொண்டே இருப்பான்
தூய்மையாக்க என்றேன்
நாடோடிக்காதல்
நாடோடியாய் நானும் நீயும் நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம் நமக்கு நாமா...
-
பதிவுத் திருமணமும் முடிந்துவிட்டது சட்ட ரீதியாக மட்டும் மனைவி ஆகிவிட்டேன் ஊர் அறிய உறவறிய திருமணத்திற்கு நாள் பார்க்கிறாள் உன் மாமியார் ...
-
பேனைமுனை கண் நனைக்க காகிதங்களோ கைக்குட்டையாய் அதை வாங்கிக்கொள்ள காகிதச்சிற்றபம் ஒன்று இறுதியாய் வரைந்தெடுக்கப்பட்டது கருவில் சு...
-
பிரபஞ்சத்தினளவு காதல் கொண்டும் அதை வார்த்தைகளால் வரிகளால் விபரிக்க தயங்கிய உள்ளங்களே இரகசியக் காத(லி)(லன்) எல்லையற்ற ப்ரியங்களை மொழியால் ...
-
அவள் உதட்டுச்சாயம் களைவதில் அத்தனை ஆடவர்களின் கண்களும் தீவிரமாய் மொய்த்துக்கொண்டிருந்தன என்ன ஆச்சரியம்! பூக்களே தேன் சுவைக்க ஏங்கும் போது...
-
ஓடாதே என் ஆசைக் கணவா அன்று தொட்ட காலம் முதல் உன் மீது கொண்ட காதல் பூமாலை மணக்கோலம் தாண்டி இப்பூவுலகில் இருவரின் பாதமும் ஒருமித்தப் பதி...
-
யாருமில்லாத மாலைவேளையில் தூறிய மழை நின்றபின் வரும் சிலிப்பான காற்றுக்கு சுடச்சுடத் தேநீரும் போற்றிக்கொள்ள கதகதப்பான கம்பளியும் தா...
-
சிறுவயதில் நான் படித்த கதைப்புத்தகங்களிலும் என் பொழுதை களிப்புடன் கழிக்க நான் பார்த்த கார்ட்டூன்களிலும் தான் நான் பார்த்திருந்தேன் த...