ஆறு மாதமும் ஆகிவிட்டது
அடிவயிற்றில் கணமோ கூடிவிட்டது
இறுக்க அணைத்துவிட நினைக்கும் உன் நினைப்பையும்
சற்று தூரமாகத்தான் வைத்துக்கொள்ள வேண்டும்
ஆசையாய் என் விரல்பிடித்து வாரிசாய் ஆண் பிள்ளை ஒன்று
கேட்கின்றாய்
உன் ஆசைக்கு ஒரு தவணை சொல்லி இம்முறை வேண்டி நிற்கின்றேன்
உன்போல் ஒரு பெண் பிள்ளை போதும்
ஊர் முழுக்க உன் அத்தை பேரன் வரப் போகிறான்
பஞ்சு மெத்தை சுகம் போதாது என் மடியில் தாலாட்டிட வேண்டும் என்று வைத்தியம் பார்க்கச் சென்றுவிட்டாள்
தோப்பு துறவு எல்லாம் என் பின்னே ஆளவே கருமாரி
அருளாய் எனக்கொரு பேரன் வரப்போகிறான் என்று
கோவில் கோவிலாய் நேர்த்தி வைத்துத் திரிகிறார் உன் மாமனார்
ஒற்றையாய் ஊரவர் உறவினர் செல்லப் பிள்ளையாய்
பெயர் பெற்ற எனக்கோ ஆசையாய் மூத்த பிள்ளை
ஆண்குழந்தையாய் இருக்கட்டும் என்றேன்
அடம்பிடிக்கும் நீயோ
ஒரு பெண்பிள்ளை மட்டும் போதும் என
முகத்தைச் சுழிக்கிறாய்
அடி கள்ளி பொதுவாய் ஆண்மகனைத் தான்
பெண் எதிர்பார்ப்பாள் உன் ஆசை வித்தியாசமானது என்றேன்
உன் அன்பில் திகைப்புற்ற நானோ உன் சாயலில் ஒரு பெண் பிள்ளை வேண்டும் என உறுதியாய் திடம் கொள்கின்றாய்
பெண் பிள்ளையவள் இன்னோர் வீட்டில் குடிகொள்பவள் லட்சுமிகரமாய் பெற்றெடுத்தும் இலட்சுமியுடன் தான் அவளை வரவேற்பார் பெற்றெடுத்துத்தா முத்தாய் ஒரு மகன்
இலட்மிசுமியுடன் சாமுந்திரிக லட்சணமாய் அழைத்துவருவான் ஒரு பெண்ணை
பெண்பிள்ளையவள் தந்தை தான் தன் முதல் உலகம் என்றாலும் தாயுடன் எவ்வளவு கடிந்து கொண்டாலும்
அன்னைக்காய் ஓர் இடம் அவள் மனதில் வைத்திருப்பாள்
பால் அருந்தும் போது அன்னை முகம் கண்டு சிரிந்து நிற்பாள் அவள் கூந்தலிலே வளையம் செய்து இழுத்திருப்பாள் வண்ணம் அது அடையாளம் கண்டு தாயின் திசைக்கு தலை அசைத்து நிற்பாள்
சலவை செய்துவைத்த புடவையை கட்டி அழகு பார்த்து கசக்கியிருப்பாள்
மல்லிகை அது கொடிமீது மணம் வீசவில்லை என் மகள் தலையில் சூட்டும் வரை பொழிவிழக்கவில்லை
காலில் கட்டிய கொளுசு சத்தம் அவள் இடம் காட்டிவிடும் என சிந்திக்காது மறைந்து நின்று வேடிக்கை காட்டுவாள்
ஒன்றும் அறியா அப்பாவியாய் அவளிடம் நானும் தோற்றுப்போவேன்
அவள் கூந்தல் வாரி ஜடை போட்டு அலங்கரிப்பேன்
காதுக்கு ஜிமிக்கி மாட்டி இரசித்து நிற்பேன்
பட்டுப்பாவாடை காஞ்சிபுரத்தில் எடுத்து வந்து அவள் அணிந்துவர கோவிலில் திருவிழா வைப்பேன்
விதவிதமாய் வளையல் வாங்கி அவள் கை நிறைய அழகு பார்ப்பேன்
காலையில் அவள் விழித்தெழ சேவலும் வாங்கி வைப்பேன் நல்லதாய் பல கற்றிட நூல்களும் தேக்கிவைப்பேன்
சத்துணவாய் பல கண்டறிந்து ஊட்டிடுவேன்
சக்திமிக்க வலிமையான பெண்ணாய் அவளை மாற்றிடுவேன்
அடுப்படியில் சிறு துணைக்காய் அவளை கூப்பிடுவேன்
என் அன்னை சொல்லிக்கொடுக்கா அனைத்தையும்
அவளுக்கு புகட்டிடுவேன்
வயதிற்கு வந்தவுடன் சிறப்பாய் எல்லாம் செய்திடுவேன்
நான் அற்ற உலகத்தில் அவள் பாதம் பதிக்க அறிவுறை உரைத்திடுவேன்
பெண்பிள்ளைதானே என ஏளனம் செய்யும் ஊரவர் முன்னே
துணிச்சலாய் அவள் நடக்க பக்கபலமாய் நின்றிடுவேன்
திருமணம் அதில் அவள் மனம் கேட்டிடுவேன் திருத்தமாய் துணை தேட பொருத்தமாய் சில விடயம் காதில் ஓதிவைப்பேன்
அச்சம் அவள் கொள்ளும் போது ஆதரவாய் வார்த்தை உரைப்பேன் எதையும் அவள் எதிர்கொள்ள ஏணிப்படியாய் தாங்கிநிற்பேன்
கரு ஒன்றை அவள் சுமக்கையில் மறுபடியும் அவளை சுமந்து செல்வேன் பிரசவறையில் அவள் வேதனை கண்டு மறுபடியும் என் வலியை பொறுத்துக்கொள்வேன்
பிள்ளை ஒன்று அவள் பெற்றெடுக்கையில் என் உயிரை கையில் வைத்திருப்பேன்
பெண்ணானவள் பூரணமடைந்ததை எண்ணி இனிவரும் கருமம் ஆற்றிநிர்பேன்
இத்தனை சுகங்களும் அடைந்துவிட ஒரு பெண்பிள்ளை போதுமென்று இத்தனை அழகாய் சொல்லிவிட்டேன்
இனி உம் விருப்பமென பேசிவிட உம்மிடம் வார்த்தையின்றிய நிலை உருவாக்கி நானோ என் பெண்பிள்ளைக்காய் பிரசவநாட்களை எண்ணிக்கழிக்கின்றேன்