கண்ணே உன் நினைவுகள் எல்லாம்
கற்பனைக் கனவுகளாய் கலைத்திட
கையில் ஏந்தினேன் மதுக்குவளை
கவலைகள் தீர வேறு மருந்தில்லை
குவளை வளைவுகளை உன்
கமலக்கன்னங்கள் தாமரை இதழாய்
கையேந்தினேன் நீயும் தவழ்ந்தாய் என்
கரங்களில் அந்திசாயும் வேளை எல்லாம்
கிண்ணத்தின் கழுத்துப்பிடியை
கைபற்றும் போதெல்லாம் உன் சங்குக்
கழுத்துவளைவை என் விரல்கள் மீட்டும்
கல்வி சரஸ்வதி வீணையாய் இசைத்தேன்
கூவும் முகமறியா கருங்குயிலும்
கீச்சிடும் சின்ன அணில் பிள்ளைகளும்
காலைவேளையில் துயில் களைய
கண்ணீராய் ஓடுகிறது என் ஏக்கங்கள்
கேலியாய் நோட்டம் விடும் அயலவர்
கண்களுக்கு கேளிக்கை வேடம் பூண்ட
கோமாளி நான் மாது உன்னை மறக்க
கிண்ணத்தில் மது உன்னைப் புசித்தேன்
கைதியாய் மனச்சிறையில் அடைக்கப்பட்டு
குற்றவாளிக்கூண்டில் உன்னை சிந்தையால்
கட்டிக்கொண்டு அவிழ்க்கமுடியா வலிகளை
குவளையில் மதுவோடு பேசித்தீர்க்கின்றேன்
களவாடிய பொழுதுகள் எல்லாம் கன்னி
கைவளையலாய் கடிவாளமிட
கையில் குவளையின் முகமும் அவள்
கண்ணாடி வளையலாய் கதைபேசுகின்றேன்
கதை கதையாப் பேசுகின்றேன்
கண்ணீரும் தீரவில்லை கண்ணிலிருத்து
கற்பனையும் மீளவில்லை உன்னிலிருந்து
கைக்குவளை மதுவும் போதவில்லை பெண்ணே
கணத்த காதல் கசடிலிருந்து