Tuesday, April 23, 2019

தீயின் மேற் காதற்கொண்ட இலவம் பஞ்சு



தீயின் மேற் காதற்கொண்ட இலவம் பஞ்சு
தீராத தலைவலிக்கு பற்றிட்டு 
தைலம் தேய்த்து
வெந்நீர் ஒற்றடம் பையக்கொடுக்க
நிம்மதியாய் தன்னை மறந்த ஒரு 
அசட்டுத்தூக்கம் தான் 
இலவம் பஞ்சு தீயின்மேற்கொண்ட காதல்
உனக்காய்ப் பிறந்த பாடல்வரிகள் கானம்
சொட்டச் சொட்ட
மெல்லியாதாய் வீசும் தென்றலுக்கு முகம் கொடுக்க
முடியா சொல்லா வேதனை தான்
இலவம் பஞ்சு கொண்ட காதல்
ஆர்ப்பரிக்கும் கடலுக்கு ஒற்றைக்கால் ஊன்றி
உறுதுணையாய் நிற்கும் வெளிச்ச விளக்கு
இலவம் பஞ்சின் காதல்
கசிந்து வந்த கண்ணீரெல்லாம் 
கல்லாற்று நீராய் நிரம்பி ஓட
தெளிந்த நீரில் கிறுக்கிய கிறுக்கலெல்லாம்
ஒன்றாய்ச் சேர்ந்தது
இலவம்பஞ்சின் காதல்
கொத்திச்சென்ற பட்சிகள் பல இருக்க 
காத்துக்கிடக்கும் காகம் பல இருக்க
மூடிவைத்த முத்துக்கு விலைதான்
இலவம் பஞ்சின் காதல்
இரயில் ஓடும் பாதையில் தள்ளிப்போகும் மரங்களை
வேடிக்கைபார்த்து உறங்கிப்போகும் 
சிறுபிள்ளைதான் இலவம் பஞ்சின் காதல்
தீயினாற்ச் சுட்ட வடு மாற்றி நாவினாற்சுட்ட 
வடு நீள தீயிற்கு இரையாகிடும் அர்ப்பணம்
எல்லாம் சமர்ப்பணம் ஆகிட
தீயிடம் காதல் கொள்ள காத்துக்கிடக்கும்
இந்த தீயின் மேற் காதற்கொண்ட இலவம் பஞ்சு

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...