என் காலைப்பின்னியிருந்தான் எடுத்துவிட
Love, War, Nation, Sad, Life, Mother, Nature, Childhood, Society, Feminism, Father, Relationship, Friendship, Women, Beauty, Tamil, poem , emotion
Monday, June 8, 2020
விடைபெறுகிறேன்
என் காலைப்பின்னியிருந்தான் எடுத்துவிட
Saturday, June 6, 2020
தோழா சற்றுத் தோள்கொடு
உயிர்நண்பா
மாற்றான் தாய் வயிற்று சகோதரா
ஆண் உலகின் அன்புயிரே
எனக்கு உதவி செய்
இருட்டைக் கண்டு எனக்குப் பயமில்லை
ஆனால்
மனித வேட்டைக்காக பின்தொடரும்
மனிதமிருகங்களின் கால் தடத்திற்கு அஞ்சுகிறேன்
நீண்ட தூரம் தனிமையில் பயணிப்பதில்
அலுத்துக்கொள்ளவில்லை
ஆனால்
வேண்டா உரசுதலில் தேகத்தில் வெறுப்பை
வளப்போரும் வார்த்தைகளால் வஞ்சனை செய்வோரும்
அருகில் அமர்வதை எண்ணி அஞ்சுகிறேன்
பொறுப்புக்களை சுமப்பதில் சளைக்கவில்லை
ஆனால்
கடமைக்குச் செல்லுமிடத்தில் கயவர்கள்
சூழ்ந்திருப்பதை எண்ணி அஞ்சுகிறேன்
காதலில் கண்கவரப்பட்டு களத்திலிறங்க தயக்கமில்லை
ஆனால்
காதல் என்ற வார்த்தை மட்டும் கூறி
காமுகரின் மூர்க்கச்செயலுக்கு
மனதில் இடம்கொடுக்க அஞ்சுகிறேன்
ஆண்களால் அழிவேற்படும் காலத்திலும்
கண்ணியமாய் கடந்து செல்லும்
நல்வர்க்க தலைவன்
வழி கடைப்பிடிக்கும் ஆடவன்
கண்ணில் உருத்தலின்றி
வாழும் யோகியன் நீ பார்த்தா
கலக்கமுற்றவேளைகளில் எல்லாம்
உயிர்நண்பா
மாற்றான் தாய் வயிற்று சகோதரா
ஆண் உலகின் அன்புயிரே
எனக்கு உதவி செய்
Monday, June 1, 2020
உனக்கும் எனக்கும் விடுதலை
உனக்கும் எனக்கும் விடுதலை
கிடைத்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
நீ நீயாகிய விடுதலை.
நான் நானாகிய விடுதலை.
எந்த முடிவுகளிலும் இருவர்பால்
சார்ந்தவை எனும் கருத்தில்
என் நச்சரிப்பிலிருந்து உனக்கு விடுதலை
நேரத்தை வீணாக்குகிறாய் என்னும்
பழியிலிருந்து எனக்கு விடுதலை
உன்நலனுக்காய் மண்றாடல்கள் பல
அக்கறையான கரிசணை தினம்
இதையெல்லாம் நிறுத்தியதில்
எனக்கு விடுதலை
இதெல்லாம் மூடச்செயல் என்று
முடக்கியதில் உனக்கு விடுதலை
அன்பான வார்த்தைகள் நேரடி சந்திப்புகள்
பேரிடியான சண்டைக்கு மருந்தென்பதில்
என்னை உதாசீனப்படுத்துவதிலிருந்து
உனக்கு விடுதலை
ஏங்கித்திவிக்கும் ஏக்கத்திலிருந்து
எனக்கு விடுதலை
ஒருமுறையாவது அழைப்பு விடுத்து
ஹலோ எனும் வார்த்தையில்
அத்தனையும் பேசியதாய்
மமதை கொள்ளும்
என் நினைவுகளுக்கு விடுதலை
ஓர் வார்த்தையிலே முழுநடிப்பையும்
காண்பிப்பதிலிருந்து உனக்கு விடுதலை
அன்புப்பரிசுகள் அன்பை மென்மேலும்
வாரிவழங்களிலும் தேவைகள் அறிந்து
பூர்த்தி செய்வதிலும் நேர்த்தியான உபாதை
என்பதிலிருந்து எனக்கு விடுதலை
அதை கண்ணாடிப்பெட்டிக்குள் சலிப்போடு
மறைத்து வைப்பதில் உனக்கு விடுதலை
முழுஉலகத்தையும் உன்னுள் செலுத்தி
திக்கற்றவளுக்கு உன் ப்ரியமே துணை
என்பதிலிருந்து எனக்கு விடுதலை
என் உலகத்தில் நீ ஜடமாய்க்கூட
இல்லை என்பதை எனக்குணர்த்துவதிலிருந்து
உனக்கு விடுதலை
எத்தனை ஆடவண் கண்ணில் படினும்
உன்னைத்தேடி நாடிவரும் என்
சிந்தனையிலிருந்து எனக்கு விடுதலை
அதையே ஆணவமாய் எண்ணி
அநீதிசெய்யும் உனக்கு விடுதலை
வருடங்கள் கடந்தும் உனைமறவாத உயிர்
உடலில் இருந்து எனக்கு விடுதலை
வருடங்கள் தான் கடந்தாலும்
பிடிகொடுக்காத உன் கோபம் கண்ணீரால்
இன்று உனக்கு விடுதலை
Saturday, May 30, 2020
மண்ணைக் காதலித்திருக்கலாம்
மண்ணைக் காதலித்திருக்கலாம்.
இரண்டின் முடிவிலும்
மண்ணோடு மண்ணாய்ப் போவதுதானே நியதி
அன்பான வார்த்தைகளுக்கும் கனிவான
கரிசணைக்கும் கரைந்துபோகாமல்
வீரத்தமிழ் வீழாது விண்ணிலும்
ஆலம் வித்துக்காளாய் விளைச்சல் காட்ட
உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம்.
காஞ்சிவரம் பட்டுக்களின் இஸ்திரி மடிப்புக்கள்
நேர்த்தியாய் நேர்கோட்டிட வர்ணங்களில்
வனப்பேன் உன் கருவிழியில் கண்ணா
என்று கர்வம் கொள்ளாமல்
காக்கி உடையோ கிழிஞ்சல் கந்தையோ
மண்மகள் அடையாளம் எனக்காட்ட
உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம்.
பத்துப்பவுன் திருமாங்கல்யம் வெகுவிரைவாய்
கழுத்தில் ஏற மஞ்சல் மேனி மையல்
கொண்டு நாணம் கூடி செக்கச்
சிவப்பதற்கு எதிரியின் பிடியிலும்
உன் விதி நீ எழுத மரணமே
மந்திரமாம் சைனைட்டுக் குப்பியுடன்
கறுப்புக்கயிறு வீரவணக்கத்தைக்காட்ட
உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம்.
பூச்செண்டு கையில்லேந்தி மணமேடை
மணம் கமழ வாச ரோஜா வாடிவிடாமல்
பன்னீர்த்தெளித்து புதுமலர்ச்சி கொடுக்க
பூமாரி பொழியும் தோட்டாக்களின் உறைவிடம்
துப்பாக்கி முனையுன் துஸ்டனை தூளாக்கும்
துடிக்கும் கரங்களிற்கு துர்பாக்கியவதி நான்
உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம்.
ஒற்றைக்கையொப்பத்தில் உன்னைச் சரண்டைந்து
இருவர் சாட்சியில் இறுதிவரை உன்னில் மாட்சி காண
நாமம் பொறித்த கல்லறைகளில் எரியும்
விளக்குக்கூட தலைவணங்கி என் மண்ணின்
காதற்புகழ் பாடி வையமும் வரவேற்க
உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம்.
உனக்கும் உற்றாருக்கும் உறங்காமல்
ஊதியமற்ற ஊழியம் பார்த்து உயிர்மூச்சுத்துறந்து
மண்ணில் உறங்கிக்கிடப்பதிலும்
தளர்வான நிலையிலும் தைரியமாய் போரடி
மண்ணில் மக்கிய உரமாகிப்போனாலும்
ஒரு விதையை விளையச் செய்து அதன்
கொடும்விசத்தில் விரோதி வீழ்த்தப்பட
உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம்.
Thursday, May 28, 2020
ஓ மனமே....
நீ ஓர் ஊனமுற்ற கைக்குழந்தை
அடித்தாரின் பெயர் சொல்லி
அழத் தெரியாத
மண்மூட்டை
ஓராயிரம் கூரிய வாள் வெட்டுக்களுக்கு
பச்சிலை அரைத்து பற்றிட்டு பத்தியம்
அறியாப் பச்சிளங்குழந்தை
சிந்தையால் காண்பதை நிஜமென நம்பி
சித்தம் மறந்த கைப்பாவை
உடலுக்காய் துடிப்பதை விடுத்து
பிறவுயிர்க்காய் துடிக்கும்
துக்கம் நிறைந்த கைம்பாவை
துடிப்பதையும் விடுத்து நினைக்கத்தூண்டும்
நினைப்பதில் உயிரைத் துறக்கத்தூண்டும்
இலவளித்த இரும்பு ஆலை
பள்ளம் தேடும் சேற்று நீரையும்
தேக்கி செந்தாமரை மலரால்
வனப்பு சேர்க்கும்
கண்ணீரின் வற்றாக்குளம்
குடியிருக்க குடிசை இல்லாதவனும்
கோபுரத்தில் அலங்கரிக்கப்பட்டு
பவனிவரும்
சில்லுடைந்த மரகத ரதம்
கற்பனையில் அனைத்தும் கடந்து
செல்லும் கற்சிலை
கூழங்கற்களால் சிதைக்கப்படும் உன்
காதலிற்கு ஓர் மணிமகுடம்
துன்பத்தில் சளைக்காமல்
அறுவடைக்காய் காத்திருக்கும்
ஏழை விவசாயி
மனமே நீ மனமாக மட்டும்
மாறிவிடு
மாற்றமில்லா மனக்கல்லறைகள் பல
உலாவித்திரிகையில் ஏமாற்ற தாழாது
நீ மரணித்துவிடக்கூடும்
Sunday, May 24, 2020
பிறைதேடலாம் வா
மிதிக்கும் துவிச்சக்கரவண்டி பெடல்களில்
பாதம் நான் வைக்க பயணம் நீ துவக்க
நீண்ட தூரம் செல்கிறோம்
பிறைதேடலாம் வா
அடர்ந்த மரக்கிளைகளில் கொஞ்சும்
கிளிக்கூட்டம் கொஞ்சம் வெட்கப்படும்
அழகை இரசித்தவாறே
பிறைதேடலாம் வா
கோடி நட்சத்திரங்கள் மினுமினுக்க
கோகிலவாணியின் பட்டம் வானுயறப்பறந்து
வாகைசூட சூறைக்காற்று புலுதிகிளப்ப
பிறைதேடலாம் வா
ஐயர் ஆத்தில் தயிர்சாதம்
ஆண்டனி வீட்டில் திருக்கைமீன் வறுவல்
ஆச்சிக்குடிசையில் நெய்முருங்கைச்சாதம்
வாசனைப்பிடியில் வயிறு தவிக்க
பிறைதேடலாம் வா
புலுங்கலரிசிச்சோறு பருப்பு பயற்றை
பூசிணி கத்தரிக்காய்கறி மொறுமொறு உழுந்துவடை
அப்பளம் மோர்மிளகாய்ப்பொரியல்
தலைவாழையிலையில்
தண்ணீர்தெளிச்சு
தண்ணீர்க்குவளையும் அருகில்
சதுர்த்திவிரதம் முடிக்க காத்திருக்கு
பிறைதேடலாம் வா
பாய்வீட்டு கோழிப்பிரியாணி நண்டுவறுவல்
இரால்பொரியல் ஆட்டுக்கால் சூப்புடன்
வெட்டி அலங்கரிக்கப்பட்ட அன்னாசி ஆப்பிள்
மாதுளை கிண்ணத்தில் வட்டிலப்பம் மஸ்கட்டும்
சவான் முடிக்க பாட்டாளிக்கூட்டம் காத்திருக்கு
பிறைதேடலாம் வா
ஆதிசிவன் முடியில் சிக்கிய பிரம்மவிஷ்ணு
புது அவதாரம் காண கண்ணைக் கசக்கி
தெளிவாய்த்தேடும் அல்லா அருவமாய்
தேடச்சொன்ன பொக்கிஷப் புதையல் காண
பிறைதேடலாம் வா
Thursday, May 21, 2020
ப்ரியங்களின் வதை
ப்ரியங்களின் வதை எப்பொழுதும்
மௌனமானதே
அது இருட்டில் மட்டும்
வெளிச்சமிட்டு காட்டிகையில்
ப்ரியங்களின் வதை எப்பொழுதும்
அவஸ்தையானதே
அலாதியான அன்பைக் கொண்டு
அநாதையாய் மாற்றுகையில்
ப்ரியங்களின் வதை எப்பொழுதும்
துயரானதே
நேசிக்கும் நெஞ்சத்தில்
நேசத்தை தேடுகையில்
ப்ரியங்களின் வதை எப்பொழுதும்
சுவாரஸ்யமானதே
எப்போதாவது இன்னல்கள் விடுத்து
இன்பங்கள் சூழ்ந்திடும் நிலை எதிர்பார்கையில்
ப்ரியங்களின் வதை எப்பொழுதும்
சுயநலமானதே
இருகண்களில் ஒன்றை மட்டும்
உருத்தி கண்ணீர் காண்கையில்
ப்ரியங்களின் வதை எப்பொழுதும்
ஆத்மாத்தமானதே
உடலின் காயங்கள் சரிசெய்துவிடும் என்கையில்
மனதால் வடுக்களின் வலி நித்தம் சுமக்கையில்
ப்ரியங்களின் வதை எப்பொழுதும்
ஒருமனமானதே
சொப்பனங்களிலும் கதி கலங்கிடும்
படுபாவி நினைவுகளை மட்டும் தெளிக்கையில்
ப்ரியங்களின் வதை எப்பொழுதும்
ப்ரியமானதே
ப்ரியமானவரின் அன்புப் பரிசை
பவித்திரமாய் பரிபூரணமாய் ஏற்கையில்
நாடோடிக்காதல்
நாடோடியாய் நானும் நீயும் நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம் நமக்கு நாமா...
-
பதிவுத் திருமணமும் முடிந்துவிட்டது சட்ட ரீதியாக மட்டும் மனைவி ஆகிவிட்டேன் ஊர் அறிய உறவறிய திருமணத்திற்கு நாள் பார்க்கிறாள் உன் மாமியார் ...
-
பேனைமுனை கண் நனைக்க காகிதங்களோ கைக்குட்டையாய் அதை வாங்கிக்கொள்ள காகிதச்சிற்றபம் ஒன்று இறுதியாய் வரைந்தெடுக்கப்பட்டது கருவில் சு...
-
பிரபஞ்சத்தினளவு காதல் கொண்டும் அதை வார்த்தைகளால் வரிகளால் விபரிக்க தயங்கிய உள்ளங்களே இரகசியக் காத(லி)(லன்) எல்லையற்ற ப்ரியங்களை மொழியால் ...
-
அவள் உதட்டுச்சாயம் களைவதில் அத்தனை ஆடவர்களின் கண்களும் தீவிரமாய் மொய்த்துக்கொண்டிருந்தன என்ன ஆச்சரியம்! பூக்களே தேன் சுவைக்க ஏங்கும் போது...
-
ஓடாதே என் ஆசைக் கணவா அன்று தொட்ட காலம் முதல் உன் மீது கொண்ட காதல் பூமாலை மணக்கோலம் தாண்டி இப்பூவுலகில் இருவரின் பாதமும் ஒருமித்தப் பதி...
-
யாருமில்லாத மாலைவேளையில் தூறிய மழை நின்றபின் வரும் சிலிப்பான காற்றுக்கு சுடச்சுடத் தேநீரும் போற்றிக்கொள்ள கதகதப்பான கம்பளியும் தா...
-
சிறுவயதில் நான் படித்த கதைப்புத்தகங்களிலும் என் பொழுதை களிப்புடன் கழிக்க நான் பார்த்த கார்ட்டூன்களிலும் தான் நான் பார்த்திருந்தேன் த...