Sunday, March 28, 2021

Rest In Peace

  



முகநூலிலும் சரி 

முகமறியா நபராயினும் சரி

Rest In Peace என்று கடந்துவிட 

ஏனோ ஒப்புக்கொள்ளவில்லை

சிலரது மரணச்செய்திகள்


படுக்கையிலே பல காலம் தத்தளிப்பவன்

வேண்டிக்கூட இரங்காத கடவுள்

விருப்பம் உள்ளவன் வாழ்வைத் தட்டிப்பறிக்கின்றான்

காரணம் கேட்டால் விதி வலியது என்று பழிபோடுகின்றான்


வாழ்நாளெல்லாம்  வறுமையில் வாடியவன் 

வசதி வந்து அனுபவிக்கும் தறுவாயில் 

வாழ்விழந்துபோகிறான்

சமுத்திரத்தின் கரை தாண்டி நிலம் தொடும் நிமிடம்

பலன் பெறமுன் கரைந்து போகின்றான்


இலட்சியங்களில் திமிர் கொண்டவன் 

சுயவிருப்பை துறக்கின்றான்

விருப்பங்களின் தேவை விரலளவு முட்ட 

விசும்பைத் துறக்கின்றாய்


ஆண்டாய் அளந்தாய் ஆசையுறவுகள் பல கண்டு 

மாண்டாய் மண்ணில் என்னும் வரலாறு தாண்டி 

பிறப்பின் பயன்காணா வயதில் உலகெய்தினாய்

சிறுபயிர் கருகியதன் வலி கண்களில் நீராய்


இறப்பிற்கு நியதியும் இல்லை எல்லையும் இல்லை

நிழல்களாய்த் தொடரும் ஏதோ ஓர் உறவிற்கு மட்டும் 

ஏன் இதயத்தைப் படைத்து அதில் 

ரணங்களை பதிக்கின்றோம்


ஆன்மாவிற்கு உடல் உறவல்ல ஆனால் 

மனிதம் மற்றும் பகுத்தறிவு எங்கோ 

ஓர் துயர் சம்பவத்தில் 

தன்னையறியாது உளவேதனையுடன் 

விட்டுச்செல்கிறது 

Rest In Peace 


No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...