Saturday, June 6, 2020

தோழா சற்றுத் தோள்கொடு


















உயிர்நண்பா

மாற்றான் தாய் வயிற்று சகோதரா

ஆண் உலகின் அன்புயிரே

எனக்கு உதவி செய்


இருட்டைக் கண்டு எனக்குப் பயமில்லை 

ஆனால் 

மனித வேட்டைக்காக பின்தொடரும் 

மனிதமிருகங்களின் கால் தடத்திற்கு அஞ்சுகிறேன்


நீண்ட தூரம் தனிமையில் பயணிப்பதில் 

அலுத்துக்கொள்ளவில்லை

ஆனால்

வேண்டா உரசுதலில் தேகத்தில் வெறுப்பை 

வளப்போரும் வார்த்தைகளால் வஞ்சனை செய்வோரும் 

அருகில் அமர்வதை எண்ணி அஞ்சுகிறேன்


பொறுப்புக்களை சுமப்பதில் சளைக்கவில்லை 

ஆனால்

கடமைக்குச் செல்லுமிடத்தில் கயவர்கள் 

சூழ்ந்திருப்பதை எண்ணி அஞ்சுகிறேன்


காதலில் கண்கவரப்பட்டு களத்திலிறங்க தயக்கமில்லை 

ஆனால்

காதல் என்ற வார்த்தை மட்டும் கூறி

காமுகரின் மூர்க்கச்செயலுக்கு

மனதில் இடம்கொடுக்க அஞ்சுகிறேன்


ஆண்களால் அழிவேற்படும் காலத்திலும்

கண்ணியமாய் கடந்து செல்லும்

நல்வர்க்க தலைவன் 

வழி கடைப்பிடிக்கும் ஆடவன் 

கண்ணில் உருத்தலின்றி

வாழும் யோகியன் நீ பார்த்தா

கலக்கமுற்றவேளைகளில் எல்லாம்


உயிர்நண்பா

மாற்றான் தாய் வயிற்று சகோதரா

ஆண் உலகின் அன்புயிரே

எனக்கு உதவி செய்



Monday, June 1, 2020

உனக்கும் எனக்கும் விடுதலை

                                                                                              

















உனக்கும் எனக்கும் விடுதலை

கிடைத்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

நீ நீயாகிய விடுதலை. 

நான் நானாகிய விடுதலை.


எந்த முடிவுகளிலும் இருவர்பால் 

சார்ந்தவை எனும் கருத்தில் 

என் நச்சரிப்பிலிருந்து உனக்கு விடுதலை

நேரத்தை வீணாக்குகிறாய் என்னும் 

பழியிலிருந்து எனக்கு  விடுதலை


உன்நலனுக்காய் மண்றாடல்கள் பல

அக்கறையான கரிசணை தினம்

இதையெல்லாம் நிறுத்தியதில் 

எனக்கு விடுதலை

இதெல்லாம் மூடச்செயல் என்று 

முடக்கியதில் உனக்கு விடுதலை


அன்பான வார்த்தைகள் நேரடி சந்திப்புகள்

பேரிடியான சண்டைக்கு மருந்தென்பதில்

என்னை உதாசீனப்படுத்துவதிலிருந்து

உனக்கு விடுதலை

ஏங்கித்திவிக்கும் ஏக்கத்திலிருந்து

எனக்கு விடுதலை


ஒருமுறையாவது அழைப்பு விடுத்து 

ஹலோ எனும் வார்த்தையில்

அத்தனையும் பேசியதாய் 

மமதை கொள்ளும் 

என் நினைவுகளுக்கு விடுதலை

ஓர் வார்த்தையிலே முழுநடிப்பையும் 

காண்பிப்பதிலிருந்து உனக்கு விடுதலை


அன்புப்பரிசுகள் அன்பை மென்மேலும் 

வாரிவழங்களிலும் தேவைகள் அறிந்து 

பூர்த்தி செய்வதிலும் நேர்த்தியான உபாதை 

என்பதிலிருந்து எனக்கு விடுதலை

அதை கண்ணாடிப்பெட்டிக்குள் சலிப்போடு 

மறைத்து வைப்பதில் உனக்கு விடுதலை


முழுஉலகத்தையும் உன்னுள் செலுத்தி 

திக்கற்றவளுக்கு உன் ப்ரியமே துணை

என்பதிலிருந்து எனக்கு விடுதலை

என் உலகத்தில் நீ ஜடமாய்க்கூட

இல்லை என்பதை எனக்குணர்த்துவதிலிருந்து 

உனக்கு விடுதலை


எத்தனை ஆடவண் கண்ணில் படினும்

உன்னைத்தேடி நாடிவரும் என் 

சிந்தனையிலிருந்து எனக்கு விடுதலை

அதையே ஆணவமாய் எண்ணி

அநீதிசெய்யும் உனக்கு விடுதலை


வருடங்கள் கடந்தும் உனைமறவாத உயிர்

உடலில் இருந்து எனக்கு விடுதலை

வருடங்கள் தான் கடந்தாலும் 

பிடிகொடுக்காத உன் கோபம் கண்ணீரால்

இன்று உனக்கு விடுதலை


Saturday, May 30, 2020

மண்ணைக் காதலித்திருக்கலாம்
























உன்னைக் காதலித்ததற்கு 

மண்ணைக் காதலித்திருக்கலாம். 

இரண்டின் முடிவிலும் 

மண்ணோடு மண்ணாய்ப் போவதுதானே நியதி


அன்பான வார்த்தைகளுக்கும் கனிவான 

கரிசணைக்கும் கரைந்துபோகாமல் 

வீரத்தமிழ் வீழாது விண்ணிலும்

ஆலம் வித்துக்காளாய் விளைச்சல் காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


காஞ்சிவரம் பட்டுக்களின் இஸ்திரி மடிப்புக்கள்

நேர்த்தியாய் நேர்கோட்டிட வர்ணங்களில் 

வனப்பேன் உன் கருவிழியில் கண்ணா 

என்று கர்வம் கொள்ளாமல் 

காக்கி உடையோ கிழிஞ்சல் கந்தையோ

மண்மகள் அடையாளம் எனக்காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


பத்துப்பவுன் திருமாங்கல்யம் வெகுவிரைவாய் 

கழுத்தில் ஏற மஞ்சல் மேனி மையல் 

கொண்டு நாணம் கூடி செக்கச்

சிவப்பதற்கு எதிரியின் பிடியிலும்

உன் விதி நீ எழுத மரணமே

மந்திரமாம் சைனைட்டுக் குப்பியுடன் 

கறுப்புக்கயிறு வீரவணக்கத்தைக்காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


பூச்செண்டு கையில்லேந்தி மணமேடை 

மணம் கமழ வாச ரோஜா வாடிவிடாமல்

பன்னீர்த்தெளித்து புதுமலர்ச்சி கொடுக்க

பூமாரி பொழியும் தோட்டாக்களின் உறைவிடம்

துப்பாக்கி முனையுன் துஸ்டனை தூளாக்கும்

துடிக்கும் கரங்களிற்கு துர்பாக்கியவதி நான்

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


ஒற்றைக்கையொப்பத்தில் உன்னைச் சரண்டைந்து

இருவர் சாட்சியில் இறுதிவரை உன்னில் மாட்சி காண 

நாமம் பொறித்த கல்லறைகளில் எரியும்  

விளக்குக்கூட தலைவணங்கி என் மண்ணின் 

காதற்புகழ் பாடி வையமும் வரவேற்க

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


உனக்கும் உற்றாருக்கும் உறங்காமல் 

ஊதியமற்ற ஊழியம் பார்த்து உயிர்மூச்சுத்துறந்து

மண்ணில் உறங்கிக்கிடப்பதிலும்

தளர்வான நிலையிலும் தைரியமாய் போரடி

மண்ணில் மக்கிய உரமாகிப்போனாலும் 

ஒரு விதையை விளையச் செய்து அதன் 

கொடும்விசத்தில் விரோதி வீழ்த்தப்பட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 



Thursday, May 28, 2020

ஓ மனமே....

                                                                                                 


ஓ மனமே .....

நீ ஓர் ஊனமுற்ற கைக்குழந்தை

அடித்தாரின் பெயர் சொல்லி 

அழத் தெரியாத

மண்மூட்டை

ஓராயிரம் கூரிய வாள் வெட்டுக்களுக்கு 

பச்சிலை அரைத்து பற்றிட்டு பத்தியம் 

அறியாப் பச்சிளங்குழந்தை

சிந்தையால் காண்பதை நிஜமென நம்பி

சித்தம் மறந்த கைப்பாவை

உடலுக்காய் துடிப்பதை விடுத்து 

பிறவுயிர்க்காய் துடிக்கும் 

துக்கம் நிறைந்த கைம்பாவை

துடிப்பதையும் விடுத்து நினைக்கத்தூண்டும்

நினைப்பதில் உயிரைத் துறக்கத்தூண்டும்

இலவளித்த இரும்பு ஆலை

பள்ளம் தேடும் சேற்று நீரையும்

தேக்கி செந்தாமரை மலரால் 

வனப்பு சேர்க்கும்

கண்ணீரின் வற்றாக்குளம்

குடியிருக்க குடிசை இல்லாதவனும்

கோபுரத்தில் அலங்கரிக்கப்பட்டு

பவனிவரும்

சில்லுடைந்த  மரகத ரதம் 

கற்பனையில் அனைத்தும் கடந்து 

செல்லும் கற்சிலை

கூழங்கற்களால் சிதைக்கப்படும் உன் 

காதலிற்கு ஓர் மணிமகுடம்

துன்பத்தில் சளைக்காமல்

அறுவடைக்காய் காத்திருக்கும் 

ஏழை விவசாயி

மனமே நீ மனமாக மட்டும்

மாறிவிடு

மாற்றமில்லா மனக்கல்லறைகள் பல

உலாவித்திரிகையில் ஏமாற்ற தாழாது

நீ மரணித்துவிடக்கூடும்

Sunday, May 24, 2020

பிறைதேடலாம் வா





மிதிக்கும் துவிச்சக்கரவண்டி பெடல்களில்

பாதம் நான் வைக்க பயணம் நீ துவக்க

நீண்ட தூரம் செல்கிறோம்

பிறைதேடலாம் வா


அடர்ந்த மரக்கிளைகளில் கொஞ்சும்

கிளிக்கூட்டம் கொஞ்சம் வெட்கப்படும்

அழகை இரசித்தவாறே

பிறைதேடலாம் வா


கோடி நட்சத்திரங்கள் மினுமினுக்க

கோகிலவாணியின் பட்டம் வானுயறப்பறந்து

வாகைசூட சூறைக்காற்று புலுதிகிளப்ப

பிறைதேடலாம் வா


ஐயர் ஆத்தில் தயிர்சாதம்

ஆண்டனி வீட்டில் திருக்கைமீன் வறுவல்

ஆச்சிக்குடிசையில் நெய்முருங்கைச்சாதம்

வாசனைப்பிடியில் வயிறு தவிக்க 

பிறைதேடலாம் வா


புலுங்கலரிசிச்சோறு பருப்பு பயற்றை

பூசிணி கத்தரிக்காய்கறி மொறுமொறு உழுந்துவடை

அப்பளம் மோர்மிளகாய்ப்பொரியல்

தலைவாழையிலையில்

தண்ணீர்தெளிச்சு

தண்ணீர்க்குவளையும் அருகில்

சதுர்த்திவிரதம் முடிக்க காத்திருக்கு

பிறைதேடலாம் வா


பாய்வீட்டு கோழிப்பிரியாணி நண்டுவறுவல்

இரால்பொரியல் ஆட்டுக்கால் சூப்புடன் 

வெட்டி அலங்கரிக்கப்பட்ட அன்னாசி ஆப்பிள்

மாதுளை கிண்ணத்தில் வட்டிலப்பம் மஸ்கட்டும்

சவான் முடிக்க பாட்டாளிக்கூட்டம் காத்திருக்கு

பிறைதேடலாம் வா


ஆதிசிவன் முடியில் சிக்கிய பிரம்மவிஷ்ணு 

புது அவதாரம் காண கண்ணைக் கசக்கி

தெளிவாய்த்தேடும் அல்லா அருவமாய்

தேடச்சொன்ன பொக்கிஷப் புதையல் காண

பிறைதேடலாம் வா

Thursday, May 21, 2020

ப்ரியங்களின் வதை




ப்ரியங்களின் வதை எப்பொழுதும் 

மௌனமானதே

அது இருட்டில் மட்டும் 

வெளிச்சமிட்டு காட்டிகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

அவஸ்தையானதே

அலாதியான அன்பைக் கொண்டு

அநாதையாய் மாற்றுகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

துயரானதே

நேசிக்கும் நெஞ்சத்தில்

நேசத்தை தேடுகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

சுவாரஸ்யமானதே

எப்போதாவது இன்னல்கள் விடுத்து

இன்பங்கள் சூழ்ந்திடும் நிலை எதிர்பார்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

சுயநலமானதே

இருகண்களில் ஒன்றை மட்டும்

உருத்தி கண்ணீர் காண்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ஆத்மாத்தமானதே

உடலின் காயங்கள்  சரிசெய்துவிடும் என்கையில்

மனதால் வடுக்களின் வலி நித்தம் சுமக்கையில் 


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ஒருமனமானதே

சொப்பனங்களிலும் கதி கலங்கிடும்

படுபாவி நினைவுகளை மட்டும் தெளிக்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ப்ரியமானதே

ப்ரியமானவரின் அன்புப் பரிசை

பவித்திரமாய் பரிபூரணமாய் ஏற்கையில்

Wednesday, May 20, 2020

கடல் பெண்ணே



கடல் பெண்ணே

உன் கண்ணீர்தான் கடலில் 

உப்பாய்க் கரைந்ததோ

காலங்களும் கடக்க 

உப்பின் செறிவும் அதிகரிப்பதேன்

இன்னும் உன் கண்ணீர்கடல் வற்றாமையா?


கடல் பெண்ணே

உன் சீற்றம் தான் கொந்தளிப்பானதோ

பாரிய அலைவெள்ளத்தில் உயரம்

விண்ணளவைத்தாண்ட உன் கோபத்தணல்

இன்னும் எத்தனை துயரின் பிரதிபலிப்போ?


கடல் பெண்ணே

உன் பொறுமைதான் 

கடல் உள்வாங்கலானதோ

உள்ளிருக்கும் பொறுமை எல்லாம்

எரிமலைக்குமுறலாய் பொழியும் எரிதணலானதோ?


கடல் பெண்ணே

உன் புண்ணியம்தான் அலையானதோ

கறைபடிந்த பாதங்களை கூச்சமின்றி

கழுவி பாவவிமோட்ஷனம் அளிப்பதனாலோ?


கடல் பெண்ணே

உன் நட்புதான் சமுத்திரப்பயணமானதோ

நீண்ட தூர எல்லைகளுக்கு முடிவிடம்கொடுத்து

இரு எதிர்முகங்களுக்கு சந்திப்புக்கொடுப்பதாலோ?


கடல் பெண்ணே

உன் தாய்மைதான் கடல்மீன்களானதோ

வருமானமும் வருவாயும் தேடித்தர

வழிதேடுபவர்கள் வறுமை போக்குவதனாலோ?


கடல்பெண்ணே

உன்காதல் தான் கழிமுகமானதோ

ஆறோடு கூடல் செய்து

இனமற்ற காதலென நிலைநிற்பதனாலோ?



Tuesday, May 19, 2020

கோவிந்தனின் கொலுபொம்மை




இவள் கோவிந்தனின் கொலுபொம்மை 
அவன் பெயர் சொல்லும் கைப்பாவை
அவன் இசைவிற்கு அசையும் தலையாட்டிப்பாவை
பிரபஞ்சமெல்லாம் பரந்திருக்கும் பிரகலாதன்
பிறை கண்டு மகிழும் மெய்ப்பாவை
அதிதியின் மகனாம் ஆதித்யன்
அறம் அஞ்சாவாசம் கொண்ட அற்புதப்பாவை
பிறப்பையும் இறப்பையும் கண்டு
அஞ்சான் அஜெயன் அவன் புகழ் பாடும்
நாதம் இவள் சுவாசிக்கும் உயிர்ச்சுவாசம்
ஆவினங்களை நேசிக்கும் கோபாலப்பிரியன்
நாமம் கோலமாய் தரிசிக்கும் கோகிலப்பாவை
பிரபஞ்சத்தே ஆளும் பிரபஞ்சகுரு
ஜெகத்குரு ஜெயம் கொண்டானின்
விஜயமே காண வாசம் கொண்ட ஜெயப்பாவை
ஸ்பரிச தேஜஷ் பவளமாய் ஜொலித்திடும் 
சூரியக்கதிர்ப் பார்வையால் அகிலம் 
அன்பால் நனைத்திடும் ரவிலோசனன் 
இரட்சிக்கும்  இரத்தினப்பாவை
இராச லீலையில் மனம் மகிழும் இராதைக்கிருஸ்ணன் 
மீளாத காதல் கொண்ட மீராவின் கண்ணன்
மணிமகுடத்தில் மைதிலி சூடிய 
மயூராதிபதியே பதியாய் தியானிக்கும்
இவள் கோவிந்தனின் கொலுபொம்மை

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...