முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சாலைகளில் மட்டுமல்ல முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சில வேளைகளில் மட்டுமல்ல நான் அணியும் முகப்பூச்சுக்களையும் யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் அவை வர்ணமற்ற புன்னகைகளின் முகச்சுருக்கங்களில் அலங்கரிக்கப்பட்ட அழகியல் கலை என்பதனால் நான் செய்யும் மந்திரப்புன்னகையை யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் கேளிகை வாழ்க்கையில் கோமாளிகள் பல உணர்வற்ற முகபாவனையை நிரந்தரம் கொள்கையில் நான் உரைக்கும் இன்மொழி யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் நச்சு வார்த்தைகளை மென்றுகொண்டிருக்கும் கவர்ச்சிகரமான உதடுகளை நோட்டமிட்டுக்கொண்டு பலர் இருப்பதால் நான் சிந்தும் வியர்வைத்துளி யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் என் தாகத்திற்கு யாரோ நீர் பருகிக்கொண்டு என் வேட்கையை தீண்டுவதில் இன்பமுறுகின்றமையால் முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சாலைகளில் மட்டுமல்ல முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சில வேளைகளில் மட்டுமல்ல
Love, War, Nation, Sad, Life, Mother, Nature, Childhood, Society, Feminism, Father, Relationship, Friendship, Women, Beauty, Tamil, poem , emotion
Subscribe to:
Post Comments (Atom)
பெண்ணுக்குள் தேவதை
பெண்ணுக்குள் புதிதாய் ஓர் தேவதை பிறக்கின்றாள் அவள் வர்ணமற்றவள் அவள் உருவமற்றவள் அவள் உணர்வுகளால் வர்ணம் கொண்டு உணர்ச்சிகளாய் உருவம் கொள்க...

-
பூலோகம் தாண்டி ஒரு இரயில் பயணம் இரு இருக்கைகள் மட்டும் கொண்ட இரயில் பெட்டிக்குள் அவனும் நானும் மற்றும் கொஞ்சம் காதலும் முடிவில்லா பயண...
-
பெண்ணுக்குள் புதிதாய் ஓர் தேவதை பிறக்கின்றாள் அவள் வர்ணமற்றவள் அவள் உருவமற்றவள் அவள் உணர்வுகளால் வர்ணம் கொண்டு உணர்ச்சிகளாய் உருவம் கொள்க...
-
பதிவுத் திருமணமும் முடிந்துவிட்டது சட்ட ரீதியாக மட்டும் மனைவி ஆகிவிட்டேன் ஊர் அறிய உறவறிய திருமணத்திற்கு நாள் பார்க்கிறாள் உன் மாமியார் ...
-
பேனைமுனை கண் நனைக்க காகிதங்களோ கைக்குட்டையாய் அதை வாங்கிக்கொள்ள காகிதச்சிற்றபம் ஒன்று இறுதியாய் வரைந்தெடுக்கப்பட்டது கருவில் சு...
-
பிரபஞ்சத்தினளவு காதல் கொண்டும் அதை வார்த்தைகளால் வரிகளால் விபரிக்க தயங்கிய உள்ளங்களே இரகசியக் காத(லி)(லன்) எல்லையற்ற ப்ரியங்களை மொழியால் ...
-
நாடோடியாய் நானும் நீயும் நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம் நமக்கு நாமா...
-
ஆர்த்திகன் என தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக்கொள்பவனை எதேற்ச்சையாய் கண்டேன் அவனோ என்னை நார்த்திகன் என ஏளனமாய்ப் பார்த்தான...
Sooper
ReplyDeleteThank you
Delete